கோவையில் ஏசி கூலிங் வராத பிரச்சனை.. 3 ஆயிரத்துக்கு 20 ஆயிரம் தரப்போகும் பிரபல நிறுவனம்
கோவை: ஏ.சி. (ac service coimbatore) வாங்குவோருக்கு ஒரு வருடம் வாரண்டி வழங்கப்படும். அந்த காலத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் வாரண்டி கிளைம் செய்ய முடியும். என்னதான் ஏசிக்கு வாரண்டி இருந்தாலும் கோடை காலத்தில் ரிப்பேர் ஆனால் ஆட்கள் பற்றாக்குறையால் சர்வீசுக்கு ஆட்கள் உடனே கிடைப்பது இல்லை.. இப்படியான சூழலை எதிர்கொண்ட கோவையைச் சேர்ந்தவர் சம்பந்தப்பட்ட ஏசி நிறுவனத்தின் மேல் வழக்கு தொடர்ந்துள்ளார். அவருக்கு 20000 வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால், மக்கள் ஏசி விற்பனை செய்யும் கடைகளில் கடந்த இரண்டு மாதங்களாக குவிந்தனர். இதேபோல் பலர் ஆன்லைனிலும் ஏசி வாங்கினார்கள். ஏசியை பொறுத்தவரை ஆன்லைனிலோ அல்லது கடைகளிலோ எப்படி வாங்கினாலும் வாரண்டி உள்ளது.

ஏசி வாங்கி ஓராண்டிற்கு ஏற்படும் பழுதிற்கு நிறுவனமே பொறுப்பாகும். அந்த வகையில் ஏசி வாங்கிய ஒரு சிலருக்கு ஏசி சரியாக வேலை செய்யாது. கியாஸ் தீர்ந்திருக்கும்.. சரியாக பிட்டிங் செய்திருக்க மாட்டார்கள். குறைபாடு உள்ள ஏசிகள் மாட்டப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இப்படி ஏசியில் ஏதாவது குறைபாடு இருந்தால், அவற்றை நிறுவனங்கள் சரி செய்து தர வேண்டியது கட்டாயம் ஆகும்.
ஆனால் தற்போது கோடை காலம் என்பதால் பணியாளர் பற்றாக்குறைகள் ஏற்படுவது இயல்பு. உடனே சர்வீசுக்கு வர மாட்டார்கள். இப்படியான சூழலை எதிர்கொண்ட கோவை இளைஞருக்கு ஏசி நிறுவனம் மற்றும் சர்வீஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் துடியலூரை சேர்ந்த 34 வயதாகும் சிபி என்பவர் கோவை நுகர்வோர் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள ஒரு பிரபல எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 2 ஏ.சி. கருவிகளை ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் செலுத்தி வாங்கியிருந்தேன். அந்த ஏ.சி. நிறுவனம் ஒரு ஆண்டுக்கு இலவச சர்வீஸ் சேவை வழங்குவதாக தெரிவித்தது. ஆனால் இலவச சர்வீஸ் சேவைக்கு விண்ணப்பித்த போது காலதாமதம் செய்தனர்.
இதனால் எங்கள் வீட்டில் குளிரூட்டும் தன்மையில் குறைவு ஏற்பட்டது. அதேநேரம் தொழில்நுட்ப ஊழியர்களை அனுப்புவதாக கூறினர். அதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் வேறு ஒருவரிடம் ரூ.3 ஆயிரம் செலுத்தி சர்வீஸ் செய்யும் கட்டாயம் ஏற்பட்டது. எனவே சம்பந்தப்பட்ட ஏ.சி. தயாரிப்பு நிறுவனம், சர்வீஸ் மையம் ஆகியவை உரிய சேவை அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதற்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு சிபி மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த கோவை நுகர்வோர் மன்ற நீதிபதி தங்கவேலு, உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர், உற்பத்தி நிறுவனம் மற்றும் சேவை நிறுவனம் ஆகியவை இணைந்து சேவை குறைபாடுக்கு இழப்பீடாக ரூ.15 ஆயிரம், கோர்ட்டு செலவாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications