சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை! கோவையில் நாளை கேரளா பேருந்துகளை சிறைபிடிக்கும் போராட்டம்!
கோவை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து கோவையில் கேரளா பேருந்துகளை சிறைபிடிக்கும் போராட்டம் நாளை நடைபெறவுள்ளது.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் முன்னெடுப்பில் நடத்தப்படவுள்ள இந்த போராட்டத்துக்கு திமுக, அதிமுக, பாஜகவை தவிர்த்து மற்ற அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் வருமாறு;
''அட்டப்பாடி அருகே கூலிக்கடவு என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டியுள்ளது. இதன்மூலம், கோவை மாவட்டத்திற்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படும் பில்லூர் அணைக்கு வரும் தண்ணீர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிறுவாணி அணையில் பெரும் மழை பெய்யும் போதும் 50 அடி உயரமுள்ள அணையில் 45 அடிக்கு மேல் தண்ணீர் நிரப்ப கேரளா அரசு அனுமதிப்பதில்லை. சிறுவாணி அணையை பராமரிக்க கேரளா அரசுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்குகிறது.
ஆனாலும், சிறுவாணி அணைக்கு சாடிவயல் வழியாக செல்லும் பாதையை சீரமைக்காமல், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வுக்குகூட சிறுவாணி அணைக்கு சாடிவயல் வழியாக செல்ல முடியாமல், ஆனைக்கட்டி வழியாக சுற்றி செல்லக்கூடிய நிலை உள்ளது.
இந்தச் சூழலில் கேரளா மாநில அரசு மீண்டும் ஒரு தடுப்பணை கட்டியிருப்பது தமிழர்களை வஞ்சிக்கும் செயல். கேரளா அரசின் இந்த போக்கை கண்டித்து கேரளா பேருந்துகளை சிறைபிடிக்கும் போராட்டம் நாளை காலை 10 மணி அளவில் கோவை காந்திபுரத்தில் நடைபெறும்.'' இவ்வாறு அந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கேரள அரசுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நட்புறவு பேணி வரும் நிலையில், கேரளா பேருந்துகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தவிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
இதனிடையே கேரளா பேருந்துகளை சிறைபிடிக்கும் போராட்டத்தை கைவிட வைப்பதற்கான முயற்சிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னெடுப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications