Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயங்கரம்! கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை.. தீராத கடன் பிரச்சினையால் விபரீதம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை அடுத்துள்ள வடவள்ளி பகுதியில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள வடவள்ளி அருகில் உள்ள வேம்பு நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்.. 34 வயதான இவர் இன்ஜினியரிங் டிசைனர் இருந்தார். இவரது மனைவி லக்ஷயா, அங்கேயே குழந்தைகளுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார்.

இந்த தம்பதிக்கு 10 வயதே ஆன ரக்ஷிதா என்ற மகளும் இருந்தார். மேலும், ராஜேஷின் அம்மா பிரேமா(73) என்பவரும் இவர்களுடன் தான் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக இவர்கள் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை.. வீடும் வெளியே பூட்டப்படவில்லை.

 Debt issue 4 members of same family end lives in Coimbatore vadavalli

இதற்கிடையே இன்று (ஜூலை 22) மாலை வீட்டிற்கு உள்ளே இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் சந்தேகம் கொண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அப்போது வீட்டின் கதவுகள் உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்ததையும் அவர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். உள்ளே போலீசார் கண்ட காட்சி அவர்களை உறைய வைப்பதாக இருந்துள்ளது.

வீட்டின் உள்ளே ராஜேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார். அவருக்கு அருகிலேயே லக்ஷயா, ரக்ஷிதா, பிரேமா ஆகியோரின் சடலங்கள் இருந்துள்ளனர். அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர்களின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கடன் தொல்லை காரணமாக இவர்கள் தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. போலீசார் இப்போது அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

 Debt issue 4 members of same family end lives in Coimbatore vadavalli

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை செய்து கொள்வது தீர்வு இல்லை. தற்கொலை தொடர்பான எண்ணங்கள் எழுந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்

மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050

ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+