கொரோனா: அரசின் நடவடிக்கையை விமர்சித்து வதந்தி பரப்பி கைதான ஹீலர் பாஸ்கர் ஜாமீனில் விடுதலை
கோவை: கொரோனா வைரஸ் தொடர்பாக சுகாதாரத் துறை எடுத்த நடவடிக்கையை விமர்சித்து பேசி வதந்தி பரப்பியதாக கைதான ஹீலர் பாஸ்கர் இன்று கோவை சிறையிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
Recommended Video
கடந்த 18-ஆம் தேதி கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இது குறித்து மாற்று முறை சிகிச்சை தருவதாக கூறி வரும் ஹீலர் பாஸ்கர் ஆடியோ மூலம் வதந்தி பரப்பினார்.
அந்த ஆடியோவில் அவர் கூறுகையில் இது இலுமினாட்டிகளின் வேலை. சும்மா இருப்பவர்களை அதிகாரிகள் ஊசி போட்டு கொன்று விடுகிறார்கள். அரசு சொல்வதை கேட்க வேண்டாம் என தவறாக பிரசாரம் செய்திருந்தார்.

சமூக வலைதளங்களில் வதந்தி
இந்த ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அந்த வகையில் ஹீலர் பாஸ்கர் மீது காவல்துறை உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யும் என தெரிவித்திருந்தார்.

பல்வேறு பிரிவுகளில் வழக்கு
இந்த ஆடியோக்களை சமூகவலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்தது. இதையடுத்து ஹீலர் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரி புகார் அளித்தார். அதன் பேரில் ஹீலர் பாஸ்கரை 20-ஆம் தேதி குனியமுதூர் போலீஸார் கைது செய்தனர். அவர் மீது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939, பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஜாமீன் கோரிக்கை
கோவை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹீலர் பாஸ்கரை வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் அவர் தனக்கு ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைக்கப் பெற்று சிறையிலிருந்து விடுதலையானார்.

மாற்று முறை மருத்துவம்
மாற்று முறை மருத்துவத்தை கடைப்பிடித்து வருகிறார். இவர் வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்ப்பது, மருந்தில்லா மருத்துவத்திற்கு மாறுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மேலும் சில நோய்களுக்கு நான் பேசுவதை கேட்டாலே அவை பறந்து போய்விடும் என கூறி வந்தவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications