கொரோனா: அரசின் நடவடிக்கையை விமர்சித்து வதந்தி பரப்பி கைதான ஹீலர் பாஸ்கர் ஜாமீனில் விடுதலை
கோவை: கொரோனா வைரஸ் தொடர்பாக சுகாதாரத் துறை எடுத்த நடவடிக்கையை விமர்சித்து பேசி வதந்தி பரப்பியதாக கைதான ஹீலர் பாஸ்கர் இன்று கோவை சிறையிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
Recommended Video
கடந்த 18-ஆம் தேதி கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இது குறித்து மாற்று முறை சிகிச்சை தருவதாக கூறி வரும் ஹீலர் பாஸ்கர் ஆடியோ மூலம் வதந்தி பரப்பினார்.
அந்த ஆடியோவில் அவர் கூறுகையில் இது இலுமினாட்டிகளின் வேலை. சும்மா இருப்பவர்களை அதிகாரிகள் ஊசி போட்டு கொன்று விடுகிறார்கள். அரசு சொல்வதை கேட்க வேண்டாம் என தவறாக பிரசாரம் செய்திருந்தார்.

சமூக வலைதளங்களில் வதந்தி
இந்த ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அந்த வகையில் ஹீலர் பாஸ்கர் மீது காவல்துறை உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யும் என தெரிவித்திருந்தார்.

பல்வேறு பிரிவுகளில் வழக்கு
இந்த ஆடியோக்களை சமூகவலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்தது. இதையடுத்து ஹீலர் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரி புகார் அளித்தார். அதன் பேரில் ஹீலர் பாஸ்கரை 20-ஆம் தேதி குனியமுதூர் போலீஸார் கைது செய்தனர். அவர் மீது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939, பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஜாமீன் கோரிக்கை
கோவை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹீலர் பாஸ்கரை வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் அவர் தனக்கு ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைக்கப் பெற்று சிறையிலிருந்து விடுதலையானார்.

மாற்று முறை மருத்துவம்
மாற்று முறை மருத்துவத்தை கடைப்பிடித்து வருகிறார். இவர் வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்ப்பது, மருந்தில்லா மருத்துவத்திற்கு மாறுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மேலும் சில நோய்களுக்கு நான் பேசுவதை கேட்டாலே அவை பறந்து போய்விடும் என கூறி வந்தவர்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications