ஏனுங்.. நான் கோயிலுக்கு போயிட்டு இருக்கேனுங்.. அழுத மூதாட்டி.. கோவை பாஜக போராட்டத்தில் பரபரப்பு
கோவை: கோவையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமர் நரேந்திர மோடி படத்தை வைக்க அனுமதி கோரி கலெக்டர் அலுவலகத்தில் பாஜகவின் போராட்டம் நடத்திய நிலையில் கோவிலுக்கு சென்ற மூதாட்டியை போலீசார் தவறுதலாக வேனில் ஏற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவையை அடுத்த வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடி புகைப்படம் மாட்டப்பட்டு இருந்தது. சில நாட்களுக்கு முன்பு திடீரென்று அந்த புகைப்படம் அங்கிருந்து அகற்றப்பட்டது.
இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதமர் புகைப்படத்தை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் பிரதமர் புகைப்படத்தை அலுவலகத்தில் மாட்ட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

பாஜக எதிர்ப்பு
இதுதொடர்பாக மனு அளிக்க பாஜகவினர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரளாக வந்தனர். 5 பேரை மட்டும் அலுவலகத்துக்கு உள்ளே செல்ல போலீசார் அனுமதித்தனர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துமீறி உள்ளே நுழைய முயன்று போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

பாஜகவினர் கைது
இதனால் போலீசாருக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சிலர் அங்கு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். 100க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

மூதாட்டியை வேனில் ஏற்றிய போலீசார்
முன்னதாக கோவையை அடுத்த கோணவாய்க்கால்பாளையத்தை சேர்ந்த பச்சியம்மாள் என்ற மூதாட்டியையும் போலீசார் தவறுதலாக போலீசார் வேனில் ஏற்றினர். அதாவது பச்சியம்மாள் தனது மகளுடன் தண்டு மாரியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தார். கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சை விட்டு இறங்கிய அவர் நடந்து சென்றபோது பாஜகவினர் போராட்டத்தை பார்த்து கொண்டிருந்தார். இந்த வேளையி்ல் அவரும் போராட்ட குழுவை சேர்ந்தவர் என நினைத்து வேனில் ஏற்றினர்.

அழுததால் இறக்கிவிட்டனர்
இதனால் அவர் பதறிப்போனார். மேலும் தான் போராட்டத்துக்கு வரவில்லை. கோவிலுக்கு சாமி கும்பிட செல்கிறேன் என கூறி அழுதார். இதையடுத்து அவரை போலீசார் வேனில் இருந்து கீழே இறக்கிவிட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications