Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈஷா ஹோம் ஸ்கூல் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை.. சட்ட நடவடிக்கை எடுப்போம்.. ஈஷா அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை: ஆந்திராவின் ராஜமுந்திரியைச் சேர்ந்த ஈஷா அறக்கட்டளையின் முன்னாள் தன்னார்வத் தொண்டர்கள் சத்ய நரேந்திர ரகானி மற்றும் யாமினி ரகானி ஆகியோர் ஈஷா குறித்து வைத்த புகார்களுக்கு ஈஷா மையம் மறுப்பு தெரிவித்துள்ளது. அவர்கள் ஈஷா அறக்கட்டளையில் குழந்தைகள் பாலியல் ரீதியாக தாக்கப்படுவதாக, பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஈஷா மையம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஈஷா நிர்வாகம் வெளியிட்டுள்ள மறுப்பில்,

1. ஈஷா ஹோம் ஸ்கூல் செயல்பாடுகளை தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விரிவான ஆய்வுகளுக்கு பிறகு பாராட்டியுள்ளது.

sadhguru jaggi vasudev

2. ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக குற்றம் நடந்ததாக கூறும் அந்த நபர், அதற்கு பிறகு அவரின் மகனை எதற்காக தொடர்ந்து அதே பள்ளியில் 3 ஆண்டுகள் படிக்க வைக்க வேண்டும்.

3. அவரின் மகன் ஹோம் ஸ்கூலில் பள்ளி கல்வி முடித்து வெளியேறும் போது, பள்ளிக்கு தனது சிறப்பான மதிப்புரைகளை வழங்கி சென்றுள்ளார்.

4. அவரின் மகன் ஈஷா ஹோம் ஸ்கூல் கல்வியை முடித்து வெளியேறிய பின்னர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் அதே பள்ளியில் அவரும் பணியாற்றி உள்ளார்.

5. அவரின் மீது மாணவர்களும், பெற்றோரும் பல்வேறு புகார்களை அளித்ததால் மாணவர்களின் நலன் கருதி, அவர் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

5. அதன் பிறகே இது போன்ற அவதூறுகளை பரப்புகிறார், அதுவும் குறிப்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முதல் நாள் ஏன் இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த வேண்டும்.

6. அந்த நபரின் குற்றச்சாட்டுகளில் அடிப்படை ஆதாரங்கள் இல்லாதவை, மேலும் அவரின் செயல்பாடுகள் உள்நோக்கம் கொண்டதாகவும், கேள்விக்குறியதாகவும் இருக்கிறது.

ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்து யாமினி ராகினி என்ற நபர் கடந்த 17.10.2024-அன்று நடைப்பெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

யாமினி அவர்களின் மகன் ஈஷா ஹோம் ஸ்கூலில் பள்ளிக் கல்வி முடித்து வெளியேறிய பின்னர், அதே பள்ளியில் ஆசிரியையாக ஜூன் 2022 முதல் மார்ச் 2024 வரை தன்னார்வ தொண்டு செய்தார். அவர் மீது பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் புகார்களை அளித்து வந்தனர். அதன் அடிப்படையில் அவரை பள்ளியை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதிலிருந்து, அவர் பல்வேறு நபர்களை தொடர்பு கொண்டு தவறான குற்றச்சாட்டுகளால் ஈஷா அறக்கட்டளையை இழிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் கூறும் 'குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை,' இதன் மீது சட்டப்படி உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

'குழந்தைகளின் பாதுகாப்பு எப்போதும் எங்களின் முன்னுரிமையாக இருந்து வருகிறது' என்பதை அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறோம். எங்கள் குழந்தைகள் மற்றும் மக்களின் பாதுகாப்பை சமரசம் செய்யும் எந்தவொரு நடத்தையையும் சிறிதளவும் ஏற்றுக்கொள்ளாத கடுமையான கொள்கைகளை நாங்கள் பின்பற்றி வருகிறோம்.

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஏற்கனவே ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்து முழுமையான ஆய்வு செய்து பள்ளியின் பல்வேறு அம்சங்களைப் பாராட்டியுள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறோம். மேலும் ஈஷா ஹோம் ஸ்கூல், சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+