ஈஷா மையத்தையும் ஈர்த்த காந்தாரா! யோகா மையத்தில் திரையிடப்பட்ட 2வது படம்! முதல் சினிமா எது தெரியுமா?
கோவை: கர்நாடகா மட்டுமின்றி இந்தியா எங்கும் சூப்பர் ஹிட் அடித்துள்ள 'காந்தாரா' திரைப்படம் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் திரையிடப்பட்டது.
கோவையில் ஈஷா யோகா மையம் அமைந்தது முதலாக அங்கு இதுவரை ஒரே ஒரு திரைப்படம் தான் திரையிடப்பட்டிருந்த நிலையில், 'காந்தாரா' இரண்டாவது படமாக திரையிடப்பட்டுள்ளது.
குலதெய்வ வழிபாடு உள்ளிட்ட சில அம்சங்களை பற்றி மிக ஆழமாக இந்த திரைப்படம் பேசுவதால் ஈஷா யோகா மையத்தில் இப்படம் திரையிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

'வேற லெவல்' ஹிட்
கர்நாடகா திரைப்படங்களை எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் அந்த மாநிலத்தை தவிர வேறு எங்கும் அவற்றை பற்றிய பேச்சு இருக்காது. மிகவும் கமர்ஷியலாக, ஹிரோயிஸத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாகவே அவை இருப்பதால் மற்ற மாநில ரசிகர்களை கர்நாடகா சினிமா ஈர்த்ததில்லை. ஆனால், அண்மையில் வெளிவந்த கேஜிஎஃப் திரைப்படம்தான் முதன்முதலில் இந்த தடையை உடைத்து இந்தியா முழுவதும் வேற லெவல் ஹிட் அடித்தது. அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது 'காந்தாரா' திரைப்படம்.

குலதெய்வ வழிபாடு
கர்நாடக கடலோரப் பிராந்தியத்தை களமாக கொண்டு இந்த 'காந்தாரா' படம் எடுக்கப்பட்டுள்ளது. பண்ணையாருக்கும், பழங்குடி மக்களுக்கும் இடையேயான நிலப் பிரச்சினை, குல தெய்வ வழிபாடு என பல அம்சங்களை இந்த திரைப்படம் சுவாரசியமாக பதிவு செய்துள்ளதால் கர்நாடகாவையும் தாண்டி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, டெல்லி என பல மாநிலங்களில் இந்த திரைப்படம் சக்கை போடு போட்டு வருகிறது.

கடும் விமர்சனம்
இதனிடையே, ஒருபுறம் பாராட்டு பெற்றபோதிலும், மறுபுறம் இந்த திரைப்படத்திற்கு எதிரான விமர்சனங்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதாவது, வலதுசாரி கண்ணோட்டத்தில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மது, மாமிசத்தை தவிர்ப்பது, சாமியை வழிபடுவது நல்லது போன்ற கருத்துக்களை சொல்வதாகவும், இந்து மத கருத்துகளை பரப்புவதாகவும் ஒருதரப்பினர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். எது எப்படி இருந்தாலும், படம் அனைத்து சென்டர் மக்களையும் காந்தாரா, காந்தம் போல ஈர்க்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஈஷா யோகா மையம்
இந்நிலையில், இந்த 'காந்தாரா' திரைப்படத்தை கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தீபாவளி தினமான கடந்த 24-ம் தேதி திரையிடப்பட்டுள்ளது. ஆன்மீக மையமான ஈஷாவில் திரைப்படங்கள் திரையிடுவது என்பது மிகவும் அரிதான ஒன்று. இதற்கு முன்பு ஜான்சி ராணி லட்சுமிபாய் கதையை அடிப்படையாக கொண்ட 'மணிகர்னிகா' என்ற திரைப்படம் ஈஷா யோகா மையத்தில் திரையிடப்பட்டது. அதன் பிறகு, அங்கு திரையிடப்படும் இரண்டாவது திரைப்படம் என்ற பெயரை 'காந்தாரா' பெற்றுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications