ஈஷா மையத்தையும் ஈர்த்த காந்தாரா! யோகா மையத்தில் திரையிடப்பட்ட 2வது படம்! முதல் சினிமா எது தெரியுமா?
கோவை: கர்நாடகா மட்டுமின்றி இந்தியா எங்கும் சூப்பர் ஹிட் அடித்துள்ள 'காந்தாரா' திரைப்படம் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் திரையிடப்பட்டது.
கோவையில் ஈஷா யோகா மையம் அமைந்தது முதலாக அங்கு இதுவரை ஒரே ஒரு திரைப்படம் தான் திரையிடப்பட்டிருந்த நிலையில், 'காந்தாரா' இரண்டாவது படமாக திரையிடப்பட்டுள்ளது.
குலதெய்வ வழிபாடு உள்ளிட்ட சில அம்சங்களை பற்றி மிக ஆழமாக இந்த திரைப்படம் பேசுவதால் ஈஷா யோகா மையத்தில் இப்படம் திரையிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

'வேற லெவல்' ஹிட்
கர்நாடகா திரைப்படங்களை எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் அந்த மாநிலத்தை தவிர வேறு எங்கும் அவற்றை பற்றிய பேச்சு இருக்காது. மிகவும் கமர்ஷியலாக, ஹிரோயிஸத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாகவே அவை இருப்பதால் மற்ற மாநில ரசிகர்களை கர்நாடகா சினிமா ஈர்த்ததில்லை. ஆனால், அண்மையில் வெளிவந்த கேஜிஎஃப் திரைப்படம்தான் முதன்முதலில் இந்த தடையை உடைத்து இந்தியா முழுவதும் வேற லெவல் ஹிட் அடித்தது. அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது 'காந்தாரா' திரைப்படம்.

குலதெய்வ வழிபாடு
கர்நாடக கடலோரப் பிராந்தியத்தை களமாக கொண்டு இந்த 'காந்தாரா' படம் எடுக்கப்பட்டுள்ளது. பண்ணையாருக்கும், பழங்குடி மக்களுக்கும் இடையேயான நிலப் பிரச்சினை, குல தெய்வ வழிபாடு என பல அம்சங்களை இந்த திரைப்படம் சுவாரசியமாக பதிவு செய்துள்ளதால் கர்நாடகாவையும் தாண்டி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, டெல்லி என பல மாநிலங்களில் இந்த திரைப்படம் சக்கை போடு போட்டு வருகிறது.

கடும் விமர்சனம்
இதனிடையே, ஒருபுறம் பாராட்டு பெற்றபோதிலும், மறுபுறம் இந்த திரைப்படத்திற்கு எதிரான விமர்சனங்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதாவது, வலதுசாரி கண்ணோட்டத்தில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மது, மாமிசத்தை தவிர்ப்பது, சாமியை வழிபடுவது நல்லது போன்ற கருத்துக்களை சொல்வதாகவும், இந்து மத கருத்துகளை பரப்புவதாகவும் ஒருதரப்பினர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். எது எப்படி இருந்தாலும், படம் அனைத்து சென்டர் மக்களையும் காந்தாரா, காந்தம் போல ஈர்க்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஈஷா யோகா மையம்
இந்நிலையில், இந்த 'காந்தாரா' திரைப்படத்தை கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தீபாவளி தினமான கடந்த 24-ம் தேதி திரையிடப்பட்டுள்ளது. ஆன்மீக மையமான ஈஷாவில் திரைப்படங்கள் திரையிடுவது என்பது மிகவும் அரிதான ஒன்று. இதற்கு முன்பு ஜான்சி ராணி லட்சுமிபாய் கதையை அடிப்படையாக கொண்ட 'மணிகர்னிகா' என்ற திரைப்படம் ஈஷா யோகா மையத்தில் திரையிடப்பட்டது. அதன் பிறகு, அங்கு திரையிடப்படும் இரண்டாவது திரைப்படம் என்ற பெயரை 'காந்தாரா' பெற்றுள்ளது.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications