ஏப்ரல் 4 ஆம் தேதி மதுக்கடைகள், இறைச்சிகடைகள் இயங்காது.. கோவை மாநகராட்சி உத்தரவு.. காரணம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

கோவை: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை மாநகராட்சியில் நாளை மறுநாள் இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை பின்பற்றால் இறைச்சிக்கடைகள் திறந்து வைத்து விதிமீறல்களில் ஈடுபட்டால் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் மஹாவீர் ஜெயந்தி ஏப்.4- ம் தேதி கொண்டாடப் படுகிறது. அதனை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து வகை மது கடைகளும் அன்று மூடப்படுகிறது என்று புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது.

சமண சமயத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஜைன மதத்துறவி மகாவீரர் ஆவார். 'நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்' என மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் போதனையை போதித்தவர் மகாவீரர்.

மகாவீர் ஜெயந்தி

மகாவீர் ஜெயந்தி

ஜீனர், மாமனிதர், ஞானப்புத்திரர், அதிவீரர் எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் மஹாவீரரின் போதனைகளும், தத்துவங்களும் இன்றும் உலகம் முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகப் போற்றப்படுகிறது. நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி வரும் 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சமணர்களால் கொண்டாடப்படும் மகாவீர் ஜெயந்திக்கு நாடு முழுவதும் அரசு விடுமுறை விடப்படும்.

மாவட்ட நிர்வாகம் உத்தரவு

மாவட்ட நிர்வாகம் உத்தரவு

அதேபோல், மகாவீர் ஜெயந்தி அன்று இறைச்சிக்கடைகளும், மதுக்கடைகளும் மூடபப்படுவது வழக்கம். அந்த வகையில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, கோவையில் வரும் செவ்வாய்க்கிழமை மாவட்டத்தில் உள்ள அனைத்தும் மதுபான கடைகள், மதுபான பார்கள் மூடியிருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை மாநகராட்சியில் நாளை மறுநாள் இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

விதிமீறல்களில் ஈடுபட்டால்

விதிமீறல்களில் ஈடுபட்டால்

இதனை பின்பற்றால் இறைச்சிக்கடைகள் திறந்து வைத்து விதிமீறல்களில் ஈடுபட்டால் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக சென்னை மாவட்ட நிர்வாகம் தரப்பிலும் மதுக்கடைகள், பார்கள், இறைச்சிக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

அனைத்து வகை மதுக்கடைகளும்

அனைத்து வகை மதுக்கடைகளும்

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு புதுவை மாநிலத்திலும் அனைத்து வகை மதுக்கடைகளும் மூடப்படுவதாக புதுவை அரசு நேற்று அறிவித்தது. மகாவீர் ஜெயந்தி தினத்தன்று, புதுவையில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம், உரிமம் பெற்ற ஓட்டல்கள், கிளப் மற்றும் கேண்டீன்களில் இயங்கும் மதுக்கூடங்களை முழுவதுமாக மூட வேண்டும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+