ஏப்ரல் 4 ஆம் தேதி மதுக்கடைகள், இறைச்சிகடைகள் இயங்காது.. கோவை மாநகராட்சி உத்தரவு.. காரணம் இதுதான்
கோவை: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை மாநகராட்சியில் நாளை மறுநாள் இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை பின்பற்றால் இறைச்சிக்கடைகள் திறந்து வைத்து விதிமீறல்களில் ஈடுபட்டால் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் மஹாவீர் ஜெயந்தி ஏப்.4- ம் தேதி கொண்டாடப் படுகிறது. அதனை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து வகை மது கடைகளும் அன்று மூடப்படுகிறது என்று புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது.
சமண சமயத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஜைன மதத்துறவி மகாவீரர் ஆவார். 'நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்' என மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் போதனையை போதித்தவர் மகாவீரர்.

மகாவீர் ஜெயந்தி
ஜீனர், மாமனிதர், ஞானப்புத்திரர், அதிவீரர் எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் மஹாவீரரின் போதனைகளும், தத்துவங்களும் இன்றும் உலகம் முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகப் போற்றப்படுகிறது. நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி வரும் 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சமணர்களால் கொண்டாடப்படும் மகாவீர் ஜெயந்திக்கு நாடு முழுவதும் அரசு விடுமுறை விடப்படும்.

மாவட்ட நிர்வாகம் உத்தரவு
அதேபோல், மகாவீர் ஜெயந்தி அன்று இறைச்சிக்கடைகளும், மதுக்கடைகளும் மூடபப்படுவது வழக்கம். அந்த வகையில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, கோவையில் வரும் செவ்வாய்க்கிழமை மாவட்டத்தில் உள்ள அனைத்தும் மதுபான கடைகள், மதுபான பார்கள் மூடியிருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை மாநகராட்சியில் நாளை மறுநாள் இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

விதிமீறல்களில் ஈடுபட்டால்
இதனை பின்பற்றால் இறைச்சிக்கடைகள் திறந்து வைத்து விதிமீறல்களில் ஈடுபட்டால் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக சென்னை மாவட்ட நிர்வாகம் தரப்பிலும் மதுக்கடைகள், பார்கள், இறைச்சிக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

அனைத்து வகை மதுக்கடைகளும்
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு புதுவை மாநிலத்திலும் அனைத்து வகை மதுக்கடைகளும் மூடப்படுவதாக புதுவை அரசு நேற்று அறிவித்தது. மகாவீர் ஜெயந்தி தினத்தன்று, புதுவையில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம், உரிமம் பெற்ற ஓட்டல்கள், கிளப் மற்றும் கேண்டீன்களில் இயங்கும் மதுக்கூடங்களை முழுவதுமாக மூட வேண்டும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications