பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்த அதிமுக தொண்டர்.. வேனை விட்டு இறங்கி வேலுமணி செய்த காரியம்
கோவை: பிரச்சாரத்தின் போது மயக்கமடைந்த அதிமுக தொண்டரை அமைச்சர் எஸ் பி வேலுமணி தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தி தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் அமைச்சர் எஸ் பி வேலுமணி கடந்த ஒரு வார காலமாக தொண்டாமுத்தூர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.

கிராமங்கள், நகர் பகுதி என தொடர்ச்சியாக நாள்தோறும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

நேற்று தொண்டாமுத்தூர் தொகுதி கரும்பு கடை அன்பு நகர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அமைச்சரின் வாகனத்தின் முன்பு சென்று கொண்டிருந்த தொண்டர் ஒருவர் திடீரென மயக்கம் அடைந்தார்.

இதனை பார்த்த அமைச்சர் வேலுமணி பிரச்சார வேனில் இருந்து இறங்கி தொண்டரின் முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசுவாசப் படுத்தினார். பின்னர் தன்னுடன் வந்த காரில் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பிரச்சாரத்தின் போது மயங்கிய நபர் ஆசாத் என்பதும் அதிமுக தொண்டரான இவர் அமைச்சர் வருகையையொட்டி அப்பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications