Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கமகம மணம்! கோவையில் 50,000 பேருக்கு மட்டன் பிரியாணி! மிலாது நபியில் அசத்திய இஸ்லாமியர்கள்!

Subscribe to Oneindia Tamil

கோவை: மிலாது நபியையொட்டி இன்று கோவை உக்கடத்தில் பள்ளிவாசல் சார்பில் 50 ஆயிரம் பேருக்கு கமகம மணத்துடன் மட்டன் பிரியாணி சமைத்து இலவசமாக வழங்கப்பட்டது.

இஸ்லாமிய இறை தூதரான முகம்மது நபி நினைவாக மிலாது நபி கொண்டாடப்பட்டு வருகிறது. 63 வயது வரை வாழ்ந்த இவர் இஸ்லாமிய மார்க்கத்தை எளிமையான போதனைகள் மூலம் கூறி வந்தார்.

 Mutton biryani distributes for 50,000 people at Ukkadam in Coimbatore for Eid Milad Un Nabi

இவர் அனைத்து மனிதர்களுக்கும் அன்பு மற்றும் ஒற்றுமையின் செய்தியை பரப்பினார். நபிகள் நாயகத்தின் பிறந்தநாளும், மறைந்தநாளும் ஒரே தினமாகும்.

நபிகள் நாயகம் கிபி 632 ரபியுல் அவ்வல் மாதம் 12ல் இவ்வுலகை துறந்தார். அல்லாவின் தூதராக கருதப்படும் அவரது நினைவை போற்றும் வகையில் முதல் முதலில் எகிப்தில் மிலாடி நபி கொண்டாடப்பட்டது. அதன்பிறகு பிற நாடுகளிலும் மிலாது நபி கொண்டாடப்பட்டு வருகிறது.

 Mutton biryani distributes for 50,000 people at Ukkadam in Coimbatore for Eid Milad Un Nabi

மிலாது நபி என்பதும் பிறை தெரிவதன் அடிப்படையில் தான் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தான் இதற்கான பிறை தமிழகத்தில் தெரிந்த நிலையில் இன்று தமிழகத்தில் மிலாது நபி கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் மிலாது நபி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

மேலும் பலர் நோன்பு வைத்து ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் உடைகளை தானமாக வழங்கினார்கள். இதற்கிடையே தான் மிலாது நபியை முன்னிட்டு கோவையில் 50 ஆயிரம் பேருக்கு இலவசமாக மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. உக்கடத்தில் உள்ள பள்ளிவாசலில் 50 அடுப்புகள் வைத்து கமகம மணத்துடன் பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது.

***

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+