Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஏ.. வாத்தியாரே.. உன்னை சும்மா விடமாட்டாங்க".. மிதுனை பார்த்து கொந்தளித்த நபர்.. கோர்ட்டில் பரபரப்பு

மிதுனை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கி உள்ளது

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் பாலியல் தொல்லை காரணமாக, பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் ஆசிரியர் மிதுனை 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

Recommended Video

    ஏ.. வாத்தியாரே.. உன்னை சும்மா விடமாட்டாங்க.. மிதுனை பார்த்து கொந்தளித்த நபர்.. கோர்ட்டில் பரபரப்பு

    கோவையில் 12ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த வாரம் பாலியல் துன்புறுத்தல் காரணமாக மனமுடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்... முன்னதாக, மாணவி எழுதியதாக ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைதாகி உள்ளார்.. அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

     மாணவி

    மாணவி

    அதேபோல, பாலியல் தொல்லை குறித்து மாணவி புகார் தந்தும், அதன்மீது நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனும் கைதாகி உள்ளார்.. அவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து செய்யப்பட்டுள்ளது.. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மீரா ஜாக்சன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது..

    உத்தரவு

    உத்தரவு

    கோவை மேற்கு மகளிர் ஸ்டேஷனில் மீரா ஜாக்சன் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவி குடும்பத்திற்கு 5 இலட்ச ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டார்... இந்நிலையில், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது...

     வழக்கு விசாரணை

    வழக்கு விசாரணை

    அப்போது கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. முன்னதாக, இந்த வழக்கு விசாரணைக்காக மிதுன் சக்கரவர்த்தியை போலீசார் கோர்ட்டுக்கு பத்திரமாக அழைத்து வந்திருந்தனர்.. நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு மறுபடியும் அவரை வெளியே அழைத்து வந்தபோது, நீதிமன்ற வளாகத்திலிருந்த ஒருவர் மிதுனை பார்த்து திடீரென சத்தம் போட்டார்..

    விசாரணை

    விசாரணை

    "வாத்தியாரே, உன்னை சும்மா விட மாட்டாங்க... கண்டிப்பா தண்டனை கிடைச்சே தீரும்" என்று முழக்கமிட்டார்.. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.. இதையடுத்து, அந்நபரை சமாதானப்படுத்திய போலீசார், அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.. அந்த நபரின் பெயர் இஸ்மாயில் என்பதும், உக்கடம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.. 5 நாள் அவகாசம் கேட்ட நிலையில், வெறும் 2 நாளுக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளதால், மிதுனிடம் விசாரணை துரிதமாகி உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+