Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நானும் ஒரு பெண்ணை பெத்தவன்தான்...பொள்ளாச்சி விவகாரத்தால் மனசு வலிக்குது.. ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

கோவை: நானும் ஒரு பெண்ணை பெற்றவன் என்பதால் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் மிகுந்த மனவேதனை அளிப்பதாக முக ஸ்டாலின் வேதனை தெரிவித்தார்.

பொள்ளாச்சி திமுக வேட்பாளர் சண்முக சுந்தரத்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

வீதி வீதியாக திறந்த வேனில் ஏறி நின்றபடி திமுக வேட்பாளர் சண்முக சுந்தரத்துக்கு வாக்கு சேகரித்த ஸ்டாலின் பேசியதாவது: "திமுக வெற்றி பெற்றுவிடும் என்ற காரணத்தினாலேயே உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு நடத்தவில்லை.

ஊழலில் நம்பர் ஒன்

ஊழலில் நம்பர் ஒன்

ஊருக்கு நல்ல பேரு வாங்கி கொடுக்கும் மனிதர்களை பார்த்திருக்கிறோம். நாட்டுக்கு நல்ல பேர் வாங்கி கொடுக்கக்கூடிய அமைச்சர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் ஊழலில் நம்பர் என்ற பெயரை வாங்கி கொடுத்த அமைச்சர் எஸ்பி வேலுமணி தான். என்ன பேசுகிறோம் என்பது அவருக்கும் தெரியாது. நமக்கும் தெரியாது. ஊழல் பட்டியலில் அவர் தான் நம்பர் ஒன்.

வேலுமணி டாப்

வேலுமணி டாப்

ஊழல் செய்வதில், லஞ்சம் வாங்குவதில், கொள்ளை அடிப்பதில் முதல்வர் எடப்பாடியையே அமைச்சர் எஸ்பி வேலுமணி, தூக்கி சாப்பிட்டுவிட்டார். இந்த பகுதியைச் சேர்ந்த அவர் என்னென்ன சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

தண்டிப்போம்

தண்டிப்போம்

டெண்டர் எல்லாம் வேலுமணிக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், அவருடைய பினாமிகளுக்கும்தான் கொடுக்கப்படுகிறது. ஊழல் பணத்தை குவித்து வைத்துக்கொண்டு முதல்வரையே மிரட்டி கொண்டு இருக்கிறார். எனவே இந்த ஆட்சி நிலைத்து நிற்காது. விரைவில் கவிழப்போகிறது. எனவே திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த ஆட்சியில் யார், யார் என்ன ஊழல் செய்தார்கள் என்பதை முதல் வேலையாக கண்டுபிடித்து தண்டிக்கப்படுவார்கள்.

சிபிசிஐடி விசாரணை

சிபிசிஐடி விசாரணை

பொள்ளாச்சி வழக்கை அமைச்சர்களுக்கு சாதகமாகவும், ஆட்சிக்கு சாதகமாகவும் சிபிசிஐடி விசாரித்துக் கொண்டு வருகிறது. இன்னும் சிபிஐ விசாரணை தொடங்கப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த உடனே சிபிஐயை வைத்து பொள்ளாச்சி வழக்கை விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க நடவடிக்கை எடுப்போம் இவ்வாறு கூறினார்.

ஆளும் கட்சி பணம்

ஆளும் கட்சி பணம்

இதையடுத்து கோவை குனியமுத்தூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் பேசியதாவது; ஆளும் அதிமுகவின் பணம் ஆம்புலன்ஸ், மற்றும் போலீஸ் வாகனங்களில் கொண்டுசெல்லப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் திமுகவே அதை செய்யும்.

நானும் பெண்ணை பெற்றவன்

நானும் பெண்ணை பெற்றவன்

பொள்ளாச்சி தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு வந்த போது மனம் உடைந்து வந்துள்ளேன். ஒரு பெண்ணா, இரண்டு பெண்ணா, 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நானும் ஒரு பெண்ணை பெற்றவன் தான். நானும் ஒரு பெண்ணுக்கு அப்பாதான். இங்கு இருக்கக்கூடிய அத்தனைபேரும் பெண்களை பெற்றவர்கள் தான்.

கண்டுகொள்ளவில்லை

கண்டுகொள்ளவில்லை

7 வருடங்களாக நடந்து கொண்டிருக்கும் கொடுமையை, போலீசுக்கு தெரிந்தே விட்டிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கும் மாமுல் செல்கிறது. போலீசில் இருக்கும் அதிகாரிகள் பல பேர் மாற்றப்பட்டுள்ளார்கள். அவர்கள் தவறு செய்யததாலேயே மாற்றப்பட்டுள்ளார்கள். இந்த பொள்ளாச்சி விவகாரத்தால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன்" இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+