கோவையில் குறிச்சி முதல் கிணத்துக்கடவு வரை.. இன்று எங்கெல்லாம் "மின்தடை".. நோட் பண்ணுங்க
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (நவம்பர் 21) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் வெளியிட்டுள்ளது. பின்வரும் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் டேன்ஜெட்கோ சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று சில இடங்களில் மின் வாரியம் சார்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் மின்தடை ஏற்படவுள்ளது. கோவையில் மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

குறிச்சி (சிட்கோ) துணை மின் நிலையம்: சிட்கோ, சுந்தராபுரம் (ஒரு பகுதி), போத்தனூர் (ஒரு பகுதி), எல்.ஐ.சி. காலனி, காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கிணத்துக்கடவு துணை மின் நிலையம்: சூலக்கல், தாமரைக்குளம், ஒத்தக்கால் மண்டபம் (ஒரு பகுதி), மண்றாம்பாளையம், கொண்டாம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று (நவம்பர் 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் இன்று (நவம்பர் 21) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்: சீரநாயக்கன்பாளையம், PN புதூர், வடவள்ளி, மருதமலை கஸ்தூரி நாயக்கன்பாளையம், இடையார்பாளையம் ஒரு பகுதி, கல்வீரம்பாளையம் வீரகேரளம் ஒரு பகுதி, அதை ஒட்டி உள்ள சில பகுதிகளில் மின்தடைபட உள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக உங்கள் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications