Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெளுத்துக் கட்டும் மழை.. கோவைக்கு ரெட் அலர்ட்.. முன்னெச்சரிக்கை பணிகள் என்ன? - அமைச்சர் முத்துசாமி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை, நீலகிரி மாவட்டத்துக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் கோவையில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் எவ்வளவு மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ளும் விதமாக அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் செய்யப்பட்டு இருப்பதாக வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

தென்மேற்குப் பருவ மழை கேரள மாநிலத்திலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மே 24 ஆம் தேதி தொடங்கியுள்ளது. நேற்று (23-05-2025) தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காலை (24-05-2025) 05.30 மணியளவில், மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று காலை 08.30 மணி அளவில், அதே பகுதிகளில், ரத்னகிரிக்கு வடக்கு-வடமேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் நிலவுகிறது.

red-alert-for-coimbatore-what-are-the-precautionary-measures-minister-muthusamy

இது மெதுவாக கிழக்கு திசையில் நகர்ந்து, தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில், இன்று நண்பகல் ரத்னகிரி மற்றும் தபோலிக்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும். மத்தியமேற்கு மற்றும் அதனை ஓட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும்.

இந்நிலையில், அடுத்த இரண்டு நாள்களுக்கு கோவை, நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நெல்லை, தென்காசி, கோவை நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், கோவையில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

கோவை, நீலகிரி மாவட்டத்துக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் கோவையில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் எவ்வளவு மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ளும் விதமாக அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் செய்யப்பட்டு இருப்பதாக வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், அவிநாசி மேம்பாலம் மற்றும் லங்கா கார்னர் ஆகிய பகுதியில் வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். கோவையில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், மழை பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன மழை இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மழை நீர் சாலைகளில் தேங்குவதைத் தவிர்க்க உரிய நடவடிக்கைகள் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோவை மாவட்டம் முழுவதும் அருமையான முன்னேற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர். எவ்வளவு மழை பெய்தாலும், அதை எதிர்கொள்ளும் அளவிற்கு நம்முடைய அதிகாரிகள் வேலை செய்து இருக்கின்றனர். முதல்வர் தொடர்ந்து முன்னேற்பாடு பணிகள் குறித்து பேசி கொண்டிருக்கின்றார். மழை பாதிப்பு ஏற்பட்டால் மக்களை தங்கவைக்க முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, வால்பாறையில் ஆர்.டி.ஓ. ஒருவர் பணியமர்த்தப்பட்டு முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ள அறவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறைகளும் இணைந்து தேவையான முன்னேற்பாடுகளை செய்துள்ளனர். குப்பைகளை சாக்கடையில் போடாமல இருந்தால் கால்வாய்களில் அடைப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும், மக்கள் இதைப் பின்பற்ற வேண்டும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+