SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே

Subscribe to Oneindia Tamil

கோவை: சட்டமன்ற தேர்தல் தோல்வி அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சிட்டிங் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள். தேர்தலுக்கு முன்பு அண்ணன் தம்பியாக இருந்த எடப்பாடி பழனிசாமியும், வேலுமணிக்கும் பனிப்போர் நிலவுகிறது. எடப்பாடி, வேலுமணி அணிகள் இணைந்துவிட்டன. ஆனாலும் பிரச்சனைகள் தீரவில்லை. பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டில் தொடங்கிய பிரச்சனை கோவை விமான நிலையம் வரை சென்றுள்ளது. இதில் வேலுமணி மிகவும் அப்செட்டாக சென்றுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், விஜய பாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரண்டனர். தவெகவுக்கு ஆதரவளித்தனர். திமுகவின் ஆதரவுடன் எடப்பாடி முதல்வராகும் கனவும் நடைபெறவில்லை. அமைச்சரவையில் இடம்பெறும் வேலுமணி அணியின் முயற்சியும் நடைபெறவில்லை. வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் 4 பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.

sp-velumani-admk-edappadi-palanisamy-sp-velumani-fight-gone-to-another-level

துக்க வீட்டில் பிரச்சனை

கடைசியில் வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்டோர் எடப்பாடியுடன் இணைந்துள்ளனர். சி.வி.சண்முகம், சி. விஜயபாஸ்கர் ஆகிய இருவர் மட்டுமே எடப்பாடியுடன் இணையாமல் தங்களின் நிலைப்பாட்டையும் அறிவிக்காமல் உள்ளனர். தனக்கு எதிராக களமாடியதால் வேலுமணி உள்ளிட்டோரின் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்திருந்தார். எடப்பாடியிடம் சரண்டராகியும் நீக்கப்பட்ட பதவிகளை கொடுக்கவில்லை.

இதனால் வேலுமணி மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி நேற்று பொள்ளாச்சி வந்திருந்தார். முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனின் அம்மாவின் மறைவுக்காக அவர் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் தெரிவித்தார். அப்போது வேலுமணியும் ஜெயராமன் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார். அங்கிருந்த எடப்பாடியின் ஆதரவாளர்கள் வேலுமணியை துரோகி கோஷமிட்டனர்.

எதிரும் புதிருமான துருவங்கள்

வேலுமணி அதிர்ச்சியாகி நிற்க ஜெயராமன் உள்ளிட்டவர்கள் சத்தம் போட்டு கண்டித்தனர். இந்த சம்பவத்தின்போது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், வேலுமணி ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. துக்க வீட்டில் மோதல் வெடித்து பரபரப்பானது. மூத்த நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தினர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்தில் வேலுமணி மிகவும் அப்செட்டாகிவிட்டாராம்.

எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சியில் இருந்து பிறகு கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து சென்னை புறப்பட்டார். எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து கோவை வரும்போதும், கோவையில் இருந்து சென்னை புறப்படும்போதும் வேலுமணி தவறாமல் செல்வார். வரவேற்கவும், வழியனுப்பவும் வேலுமணி முதல் ஆளாக நிற்பது வழக்கம். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அவர்களுக்குள் பகை அதிகமாகியுள்ளது. இதில் இருவருமே கோபத்தில் உள்ளனர்.

வேலுமணி புறக்கணிப்பு

இதனால் நேற்று இரவு எடப்பாடி பழனிசாமியை வழியப்புவதற்காக வேலுமணி கோவை விமான நிலையம் செல்லவில்லை. அவருக்கு பதிலாக புதிதாக அதிமுக கோவை தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள செ.ம வேலுசாமி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தான் விமான நிலையம் சென்று எடப்பாடி பழனிசாமியை வழியனுப்பினார்கள். இதனால் அணிகள் இணைந்தும் மனங்கள் இணையாத நிலை அதிமுகவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+