Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் ஒரே ஆளாக வந்து செய்த சம்பவம்.. யார் அவர்? வெளியான சிசிடிவி காட்சி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை காந்திபுரத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சுமார் 200 பவுன் நகைகளை தனி ஒருநபராக வந்து திருடிச் சென்ற திருடனின் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. அந்த காட்சியில், நள்ளிரவு சுமார் 2.30 மணி அளவில் ஒருவர் நகைக்கடையில் இருந்து நகைகளை அடித்துக் கொண்டு செல்வது தெரிகிறது.

கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இன்று அதிகாலை களவு போய் இருக்கிறது. 150 முதல் 200 பவுன் நகை வரை களவு போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Who robbed Coimbatores Jose Alukkas Jewellery? CCTV footage released

கடை ஊழியர்கள் நேற்று இரவு வழக்கம் போல் கடைகளை மூடிவிட்டு சென்றுள்ளனர். இன்று காலை கடையை திறந்த போது நகைக்கடையில் இருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிரச்சி அடைந்த கடை ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்கும் நகை கடை நிர்வாகத்திற்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். மோப்ப நாய் உதவியுடனும் தடயவியல் சோதனை நிபுணர்களுடனும் தொடர்ந்து நகைக்கடையில் ஆய்வு செய்தனர். கடை முழுவதும் நடத்திய சோதனையில், தனியொருவராக உள்ளே வந்த நபர், ஏசி வெண்டிலேட்டர் மூலம் கடைக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து பேட்டி அளித்த கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன், "சிசிடிவி காட்சியில் ஒருவர் மட்டுமே வந்து கொள்ளையடித்து சென்றிருப்பது பதிவாகி இருக்கிறது. இந்த நகைக்கடையில் 12 நபர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் யாரும் பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்கள். சம்பவ இடத்தில் தடயங்களும் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. இது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்துள்ளோம். கூடிய விரைவில் குற்றவாளியை பிடித்துவிடுவோம்.

சிசிடிவி ஆய்வு செய்யும் பொழுது ஒரு நபர் தான் சம்பவத்தில் ஈடுபட்டது போல் தென்படுகிறார். கொள்ளை சம்பவத்தில் வேறு யாரேனும் உள்ளார்களா என்பது தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகிறோம். சுமார் 150 லிருந்து 200 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

சம்பவத்தில் ஈடப்பட்டவர் உள்ளே சென்ற பொழுது முகத்தை மறைத்திருக்கிறார. முகமூடி எதுவும் போடவில்லை. நாங்கள் ஆய்வு செய்த போது, அவர் ஏசி வென்டிலேட்டர் வழியாக சென்றது தெரியவந்தது. இந்த கடையில் அண்மையில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றது. எனவே அந்த பணிகளை மேற்கொண்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம், அனைத்து கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறோம்" என்றார். இதனிடையே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவரின் சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.அதில் ஒருவர் சர்வ சாதாரணமாக வந்து நகைகளை கொள்ளை அடித்தபடி செல்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+