அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவு.. வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல்? தேர்தல் ஆணைய விதி என்ன?
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியின் எம்எல்ஏ அமுல் கந்தசாமி உடல்நலக் குறைவால் காலமானார். இந்த நிலையில் வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் ஒரு தொகுதியின் எம்எல்ஏ உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ, அடுத்த 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி இருக்கும் சூழலில், இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்றவர் அமுல் கந்தசாமி. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சிபிஐ வேட்பாளர் ஆறுமுகத்தை விடவும் சுமார் 13 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அமுல் கந்தசாமி வெற்றிபெற்றார். கடந்த தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களில் முதலாவதாக வெற்றியை உறுதி செய்தவர்.

அமுல் கந்தசாமி மறைவு
சிறுவயது முதலே அதிமுகவில் இருந்து வந்த அமுல் கந்தசாமி, ஊராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளில் இருந்திருக்கிறார். கடந்த முறை முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அண்ணனூர் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், வால்பாறை தொகுதியில் சிறப்பாக பணியாற்றி வென்றார்.
வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல்?
இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக அமுல் கந்தசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென காலமானார். இவரது மறைவு அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் ஆணையம் விதிகள் என்ன?
ஏனென்றால் சட்டப்படி சட்டசபை அல்லது நாடாளுமன்ற தொகுதிகள் காலியானால் அடுத்த 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஒரு தொகுதியின் பிரதிநிதி உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ, அடுத்த 6 மாதங்களில் அங்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும். ஏனென்றால் தொகுதி மக்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லாமல் போகக்கூடாது என்பதற்காக தான்.
சட்டமன்றத் தேர்தல்
இதன்படி பார்த்தால், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் சட்டமன்றத் தேர்தலுக்கு 10 மாதங்களே உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே தேர்தல் தேதி அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் உள்ளது. இதனால் வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்குமா என்பது சந்தேகம் தான்.
அதிமுக நிலைப்பாடு
அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் கடைசியாக நடந்த 2 இடைத்தேர்தலையும் அதிமுக புறக்கணித்தது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. திமுக, தேமுதிக மற்றும் நாம் தமிழர் ஆகிய 3 கட்சிகள் மட்டுமே போட்டியிட்டன. இதனால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், சட்டமன்றத் தேர்தலுக்கு 4 மாதமே இருப்பதால், எந்த கட்சியும் ரிஸ்க் எடுக்க வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications