நீர் கொழும்பு தேவாலயத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்த கூட்டத்தில் நடுவே வந்த தீவிரவாதி - வீடியோ!
Recommended Video
கொழும்பு: நீர் கொழும்பு தேவாலயத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்த கூட்டத்தில் நடுவே புகுந்து வந்த தீவிரவாதி குறித்த சிசிடிவி வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி தேவாலயங்களில் கூடினர். அப்போது கூட்டத்தோடு கூட்டமாக உள்ளே வந்த தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதலை நடத்தினர்.

இதில் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் உலக நாடுகள் அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
இவர் தேவாலயத்தில் நுழைகிறார். பின்னர் அங்கு பிரார்த்தனைக்காக கூடியுள்ள மக்களை கடந்து உள்ளே செல்கிறார். பின்பக்கமாக மாட்டியுள்ள பையில் வெடிப்பொருள்களை வைத்துள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த கேமராவில் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications