இலங்கை தேவாலயங்களை குறிவைத்து தாக்குதல் நடந்தது ஏன்? நாடாளுமன்றத்தில், அமைச்சர் பரபரப்பு தகவல்
Recommended Video
கொழும்பு: கிறிஸ்தவ வலதுசாரிகள் தாக்குதலுக்கு பதிலடியாக, இலங்கையில் தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்பு துறை இணை அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை, இலங்கையில் உள்ள, தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை, குறிவைத்து தற்கொலைப் படையினர் நடத்திய தொடர் தாக்குதலில், 321 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தை அடுத்து, இலங்கை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று கூடி, இந்த சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்தியது.

பாதுகாப்புத்துறை இணை அமைச்சர்
இதில் பாதுகாப்பு துறை இணை அமைச்சர், ருவான் விஜேவர்த்தன பேசுகையில், கிரைஸ்ட் சர்ச் நகரில் மசூதிகளை குறிவைத்து வலதுசாரி அமைப்பு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், இஸ்லாமியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, இலங்கையில், தேவாலயங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய உளவு அமைப்பு
இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னணியில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இருப்பதாக, இந்திய உளவுத்துறையும் ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்தில் மேலும் அவர், கூறுகையில், இலங்கை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை, 321, என்று அதிகரித்துள்ளது. இதில் 38 பேர் வெளிநாட்டினர் என்று தெரிவித்துள்ளார்.

கிறைஸ்ட்சர்ச் தாக்குதல்
நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் இயந்திரத் துப்பாக்கியுடன் புகுந்த, கிறிஸ்தவ வலதுசாரி தீவிரவாதிகள், அங்கு தொழுகை நடத்த வந்த முஸ்லீம்களை நோக்கி, சரமாரியாக சுட்டனர். இந்த பயங்கர சம்பவத்தில் 50 பேர் பலியாகினர். இந்த சம்பவம் மார்ச் 15ம் தேதி நடைபெற்றது.

பதிலடி தாக்குதல்
கிறிஸ்தவ வலதுசாரி அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள்தான், இந்த தாக்குதலை நடத்தியதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான், அந்த தாக்குதலுக்கு பதிலடியாக கிறிஸ்தவர்கள் மீது, இலங்கையில், தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications