இதுதான் ஒரே வழி! தொடர்ந்து மோசமாகும் பொருளாதாரம்.. நிதியமைச்சர் எடுத்த முக்கிய முடிவு! மீளுமா இலங்கை
கொழும்பு: இலங்கை பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், நிலைமையைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
இலங்கை நாட்டில் சுதந்திரம் அடைந்தது முதல் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி என பல்வேறு காரணங்களால் அங்கு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வந்தது.
இப்போது பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார நிலைமை இப்போது நிலைமை கையை மீறிச் சென்றுவிட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கூட உச்சம் தொட்டுள்ளது.

ராஜபக்ச அரசு
இதன் காரணமாக ராஜபக்ச அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். அங்குள்ள அனைத்து தரப்பு மக்களும் இரவு பகல் பார்க்காமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒரு புறம் தொடர்ந்து மோசமடையும் பொருளாதாரம் மறுபுறம் ஓயாமல் நடைபெறும் மக்கள் போராட்டம் என்று ஒட்டுமொத்த இலங்கையிலும் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா உதவி
இதனிடையே நிலைமையை மேம்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நாடுகளிடம் உதவி கோரி வருகிறது. ஏற்கனவே, 1 பில்லியன் டாலர் கடனுதவியை இந்தியா அறிவித்தது. அதேபோல எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிக்க 40 ஆயிரம் டன் டீசலையும் இந்தியா வழங்கியது. இருந்த போதிலும், இலங்கை நாட்டில் நிலைமை மேம்படவில்லை. இதையடுத்து அடுத்தகட்ட பொருளாதார உதவிகளைப் பெற இலங்கைப் பிரதிநிதிகள் அமெரிக்கா செல்கின்றனர்.

நிதியமைச்சர் அமெரிக்கா பயணம்
சர்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடம் இருந்து 4 பில்லியன் டாலர் கடன் பெற இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்கா செல்கின்றனர். அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருளுக்கான தொகை மற்றும் கடனை திரும்பச் செலுத்த இது உதவும். புதிய நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு வரும் ஏப்ரல் 19 முதல் 24 வரை கடனுதவியைப் பெற பல்வேறு அமைப்புகளுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

சர்வதேச நிதியம்
சர்வதேச நிதியத்துடனான கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை முடிக்கும் வரை, கடன் பத்திரங்கள் உள்ளிட்ட வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்தி வைப்பதாகச் சமீபத்தில் அந்நாட்டு நிதி அமைச்சகம் அறிவித்தது. அந்த அறிவிப்பு வெளியான சில நாட்களில் இப்போது இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்கா செல்கின்றனர். இந்த ஆண்டு மட்டும் இலங்கை 7 பில்லியன் டாலர் கடனைச் செலுத்த வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரலாற்றில் முதல்முறை
1948ஆம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கை நாட்டால் கடனை திரும்பச் செலுத்த முடியாமல் போயுள்ளது இதுவே முதல்முறையாகும். அமெரிக்கா பயணம் தொடர்பாகத் தொடர்பாக இலங்கை நிதி அமைச்சர் அலி சப்ரி கூறுகையில், "இலங்கையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர எங்களுக்கு உடனடியாக அவசர நிதி தேவை. இந்த நிதியை அவர்கள் விரைவில் எங்களுக்கு அளிக்க வேண்டும்" என்றார்.

பங்குச்சந்தை மூடல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்களும் இலங்கையில் முதலீடு செய்யத் தயங்குகின்றனர். இதன் காரணமாக இலங்கை பங்குச் சந்தைகள் தொடர்ச்சியாகச் சரிவைச் சந்தித்து வருகிறது. இதனிடையே பங்குகளை விற்கும் முன்பு, பொருளாதார நிலைமை குறித்துத் தெளிவான புரிதலை ஏற்படுத்தும் வகையில் ஒரு வாரத்திற்குப் பங்குச்சந்தையை மூடுவதாக அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications