Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுதான் ஒரே வழி! தொடர்ந்து மோசமாகும் பொருளாதாரம்.. நிதியமைச்சர் எடுத்த முக்கிய முடிவு! மீளுமா இலங்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், நிலைமையைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

இலங்கை நாட்டில் சுதந்திரம் அடைந்தது முதல் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி என பல்வேறு காரணங்களால் அங்கு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வந்தது.

இப்போது பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார நிலைமை இப்போது நிலைமை கையை மீறிச் சென்றுவிட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கூட உச்சம் தொட்டுள்ளது.

 ராஜபக்ச அரசு

ராஜபக்ச அரசு

இதன் காரணமாக ராஜபக்ச அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். அங்குள்ள அனைத்து தரப்பு மக்களும் இரவு பகல் பார்க்காமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒரு புறம் தொடர்ந்து மோசமடையும் பொருளாதாரம் மறுபுறம் ஓயாமல் நடைபெறும் மக்கள் போராட்டம் என்று ஒட்டுமொத்த இலங்கையிலும் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.

 இந்தியா உதவி

இந்தியா உதவி

இதனிடையே நிலைமையை மேம்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நாடுகளிடம் உதவி கோரி வருகிறது. ஏற்கனவே, 1 பில்லியன் டாலர் கடனுதவியை இந்தியா அறிவித்தது. அதேபோல எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிக்க 40 ஆயிரம் டன் டீசலையும் இந்தியா வழங்கியது. இருந்த போதிலும், இலங்கை நாட்டில் நிலைமை மேம்படவில்லை. இதையடுத்து அடுத்தகட்ட பொருளாதார உதவிகளைப் பெற இலங்கைப் பிரதிநிதிகள் அமெரிக்கா செல்கின்றனர்.

 நிதியமைச்சர் அமெரிக்கா பயணம்

நிதியமைச்சர் அமெரிக்கா பயணம்

சர்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடம் இருந்து 4 பில்லியன் டாலர் கடன் பெற இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்கா செல்கின்றனர். அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருளுக்கான தொகை மற்றும் கடனை திரும்பச் செலுத்த இது உதவும். புதிய நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு வரும் ஏப்ரல் 19 முதல் 24 வரை கடனுதவியைப் பெற பல்வேறு அமைப்புகளுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

 சர்வதேச நிதியம்

சர்வதேச நிதியம்

சர்வதேச நிதியத்துடனான கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை முடிக்கும் வரை, கடன் பத்திரங்கள் உள்ளிட்ட வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்தி வைப்பதாகச் சமீபத்தில் அந்நாட்டு நிதி அமைச்சகம் அறிவித்தது. அந்த அறிவிப்பு வெளியான சில நாட்களில் இப்போது இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்கா செல்கின்றனர். இந்த ஆண்டு மட்டும் இலங்கை 7 பில்லியன் டாலர் கடனைச் செலுத்த வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 இலங்கை வரலாற்றில் முதல்முறை

இலங்கை வரலாற்றில் முதல்முறை

1948ஆம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கை நாட்டால் கடனை திரும்பச் செலுத்த முடியாமல் போயுள்ளது இதுவே முதல்முறையாகும். அமெரிக்கா பயணம் தொடர்பாகத் தொடர்பாக இலங்கை நிதி அமைச்சர் அலி சப்ரி கூறுகையில், "இலங்கையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர எங்களுக்கு உடனடியாக அவசர நிதி தேவை. இந்த நிதியை அவர்கள் விரைவில் எங்களுக்கு அளிக்க வேண்டும்" என்றார்.

 பங்குச்சந்தை மூடல்

பங்குச்சந்தை மூடல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்களும் இலங்கையில் முதலீடு செய்யத் தயங்குகின்றனர். இதன் காரணமாக இலங்கை பங்குச் சந்தைகள் தொடர்ச்சியாகச் சரிவைச் சந்தித்து வருகிறது. இதனிடையே பங்குகளை விற்கும் முன்பு, பொருளாதார நிலைமை குறித்துத் தெளிவான புரிதலை ஏற்படுத்தும் வகையில் ஒரு வாரத்திற்குப் பங்குச்சந்தையை மூடுவதாக அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+