இலங்கையில் நாளை அதிபர் தேர்தல்- நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு- முதல் முறையாக 35 பேர் போட்டி!
கொழும்பு: இலங்கையில் 8-வது அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை வரலாற்றில் அதிபர் தேர்தலில் முதல் முறையாக 35 பேர் போட்டியிடுகின்றனர்.
இலங்கை அதிபர் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த செப்டம்பர் 18-ந் தேதி வெளியிடப்பட்டது. இதனையடுத்து வேட்பு மனுத்தாக்கல்கள் நடைபெற்றன.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளராக சஜித் பிரேமதாச, மகிந்த ராஜபக்சேவின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சே உள்ளிட்ட 35 பேர் களத்தில் உள்ளனர்.

முதல் முறையாக அதிக வேட்பாளர்கள்
ஜேவிபியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, 2 பெண்கள், பவுத்த பிக்குகள், மாஜி ராணுவ தளபதிகள் ஆகியோரும் வேட்பாளர்கள். இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுவது தற்போதுதான் முதல் முறையாகும்.

சஜித்- கோத்தபாய போட்டி
இதில் சஜித் பிரேமதாச, கோத்தபாய ராஜபக்சே இடையேயாதான் கடும் போட்டி நிலவுகிறது. தமிழர் தரப்பைப் பொறுத்தவரையில் சஜித் பிரேமதாசவுக்கு அதிக ஆதரவை தெரிவித்துள்ளன. இருப்பினும் கருணா, ஈபிஆர்எல்எப் வரதராஜ பெருமாள் உள்ளிட்டோர் கோத்தபாய ராஜபக்சேவை ஆதரிக்கின்றனர்.

காலை முதல் மாலை வரை வாக்குப் பதிவு
இத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 22 தேர்தல் மாவட்டங்களில் 12,845 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,59,92,96 பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்கான நீண்ட வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுள்ளது.

மாலை முதல் வாக்கு எண்ணிக்கை
மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடைந்த உடன் மாலை 5.15 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விடும். நள்ளிரவில் முதலாவது தேர்தல் முடிவுகள் வெளியாகும். அதிகாலையில் இலங்கையின் 8-வது அதிபர் யார் என்பது தெரிந்துவிடும்.

வெளிநாட்டு பார்வையாளர்கள்
இலங்கை அதிபர் தேர்தலை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இத்தேர்தல் கண்காணிப்புக்காக 3 இந்தியர்கள் உட்பட 14 சர்வதேச பார்வையாளர்களும் இலங்கையில் முகாமிட்டுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications