பெரிய பை.. வேகமான நடை... சர்ச்சில் குண்டு வைத்த தீவிரவாதி இவரா? பகீர் வீடியோ வெளியிட்ட போலீஸ்
இலங்கை குண்டுவெடிப்பில், தீவிரவாதி என்று கருதப்படும் நபர் ஒருவரின் வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video
கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பில், தீவிரவாதி என்று கருதப்படும் நபர் ஒருவரின் வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த ஈஸ்டர் அன்று காலை 9 மணி அளவில் இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 320க்கும் அதிகமானோர் பலியானார்கள்.
கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு சர்ச், சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது. இதுகுறித்து வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
பொறுப்பு
இந்த நிலையில் இலங்கை தாக்குதலுக்கு தற்போது ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. ஐஎஸ் அமைப்பின் இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்ட் லெவண்ட் குழு இதற்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
இப்போதுதான்
கடந்த சில நாட்களாக இலங்கை தாக்குதல் நடத்தியது யார் என்று குழப்பம் நிலவி வந்தது. ஆனால் 48 மணி நேரமாக யாரும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்காமல் இருந்தனர். இந்த நிலையில் தற்போது ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று இருக்கிறது.
320க்கும் அதிகமானோரை பலிவாங்கிய இலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு.. திருப்பம்!
|
என்ன வீடியோ
இந்த தாக்குதல் குறித்து வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் உள்ள புனித செபாஸ்டியன் சர்ச்சில் நடந்த தாக்குதல் குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. இதில் தீவிரவாதி என்று கருதப்படும் நபர் பெரிய பேக்குடன் தேவாலயத்திற்கு வருவது பதிவாகி உள்ளது.
விசாரணை
முதுகில் இவர் மிகப்பெரிய பையை மாட்டி இருக்கிறார். இதில்தான் வெடிகுண்டு இருந்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். குண்டுவெடிப்பில் இவரும் இறந்திருக்க வாய்ப்புள்ளதால், இவரின் உடலை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.