சிதம்பரம் அருகே வாய்க்காலில் பாய்ந்து தனியார் பேருந்து விபத்து.. 20 பேர் படுகாயம்
சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் சுமார் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்ட அக்கம் பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர்.
புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு தனியார் பேருந்து ஒன்று இன்று மதியம் பயணிகளை ஏற்றிக்கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த தனியார் பேருந்தில ஏராளமான பயணிகள் பயணித்துக் கொண்டுஇருந்தனர்.

ஒவ்வொரு ஊராக பயணிகளை ஏற்றி இறக்கிவிட்டு சென்று கொண்டிருந்த அந்த பேருந்து சிதம்பரம் அருகே வேளக்குடி என்ற கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தது.
அப்போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையை ஒட்டியிருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விழுந்தது, பேருந்து கவிழ்ந்து விழுந்ததால், அதில் பயணம் செய்தவர்களில் சுமார் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கிய அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்தகிராம மக்கள் மற்றும் சாலையில் சென்றவர்கள் ஓடிச்சென்று பார்த்தனர்.
அங்கு பல பயணிகள் இரத்த காயங்களுடன் பேருந்துக்குள் சிக்கியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கிருந்த மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு காயமடைந்த 20 பயணிகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications