என் தம்பி 2021ல் முதல்வராகணும்.. பெங்களூரிலிருந்து வந்து ரஜினி அண்ணன் சாந்தி யாகம்!
Recommended Video

சிதம்பரம்: இன்னும் கட்சியை ஆரம்பிக்கவில்லை, அதற்குள்ளாக முதல்வராக வேண்டி, சிறப்பு யாகம் வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள் நடிகர் ரஜினிகாந்தின் விசுவாசிகள். ஆன்மீக அரசியலில் அடியேடுத்து வைத்துள்ள நடிகர் ரஜினிகாந்த், படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்தநிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு வருகை தந்துள்ள நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணா, நடராஜர் ஆலயத்தில் சாந்தி யாகம் நடத்தினார். யாகத்தில் கர்நாடக மாநில ரஜினி மக்கள் மன்ற தலைவரும், ரஜினிகாந்த் மாப்பிள்ளையுமான சந்திரகாந்த் கலந்து கொண்டார்.
இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறுகையில், ரஜினி நீண்ட ஆயுள் பெறவும், 2021 தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக வேண்டும் என்பதற்காகவும் சாந்தி யாகம் நடத்தப்பட்டதாக கூறினர்.

அனல் பறக்கும் அரசியல் வசனம்
தமிழ் திரைஉலகில் சூப்பர் ஸ்டராக ஜொலிக்கும் நடிகர் ரஜினி கடந்த, 1991ம் ஆண்டு அதிமுக மீது முதல் எதிர்ப்பை பதிவு செய்து அரசியலுக்கு அச்சாரமிட்டார். இதன் தொடர்ச்சியாக, கடந்த 1992ம் ஆண்டு அவர் நடித்த "அண்ணாமலை" திரைப்படத்தில் அனல் பறக்கும் அரசியல் வசனம் பேசினார்.

அரசியல் கருத்து
தொடர்ந்து, திரைப்படங்களில் அரசியல் கருத்துக்களை பேசி வந்த ரஜினி, 1995-ம் ஆண்டு நேரடியாகவே பேச ஆரம்பித்தார். இதன் பிறகு, சினிமா பக்கம் தனது கவனத்தை செலுத்தினாலும், பல அரசியல் நெருக்கடிகளை கடந்து வந்தனர்.

மோடிக்கு பாராட்டு
பின்னர், 2014ம் ஆண்டு மோடி, ஒரு சிறந்த தலைவர் என ரஜினி பாராட்டி மீண்டும் தனது அரசியல் கருத்தை பதிவு செய்தார். 2017 -ம் ஆண்டு போர் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்ற அவர், அதே ஆண்டு டிசம்பர் 31 - ல் அரசியல் பிரவேசம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 9ம் தேதி பாஜக தேர்தல் அறிக்கையை ரஜினி பாராட்டினார். இப்போது, சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என அறிவித்துள்ளார்.

கவர்ந்திழுக்கும் தலைவர்
இதற்கிடையில், மத்தியில் தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது குறித்து பேசிய ரஜினிகாந்தி, நாடாளுமன்ற தேர்தலில் மோடி என்கிற தனி மனித தலைமைக்கு கிடைத்த வெற்றி. அவர் மக்களை கவர்ந்திழுக்கும் தலைவர். இந்தியாவில் நேருவுக்கு பிறகு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்கள் மக்களை கவர்ந்திழுப்பவர்களாக இருந்துள்ளனர். அந்த வகையில் தற்போது மோடி கிடைத்துள்ளார் என்றும் பேசினார்.

சரியான தலைமை இல்லை
தமிழகத்திற்கு சரியான தலைமை இல்லை என்று கூறியுள்ள ரஜினிகாந்த், தற்போது, திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அடுத்த வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வழியே பின்பற்றுவாரா அல்லது வேரேதும் திட்டமா என்பதை ரஜினிகாந்த் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
-
‘துரந்தர் 2’ படத்தை பார்த்து ரஜினி போட்ட போஸ்ட்.. இயக்குனர் செய்த எதிர்பாராத சம்பவம்! குவியும் கமெண்ட்ஸ் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications