குடிகாரர்களை கிருமி நாசினி கொண்டு குளிப்பாட்டிய கடலூர் நகராட்சி.. வைரல் வீடியோ..
கடலூர்: கடலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்குவதற்காக 3 கி.மீ தூரத்திற்கு வரிசையில் நின்றிருந்த குடிகாரர்கள் மீது நகராட்சி ஊழியர்கள் லாரி மூலம் கிருமி நாசினியை பீய்ச்சி அடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கட்டுப்பாடு உள்ள பகுதிகளை தவிர மற்ற இடங்களில் நிபந்தனைகளுடன் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாலையிலேயே கடை முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்து குடிகாரர்கள் மதுபானங்களை வாங்கிச்சென்றனர்.

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் தமிழகத்தில் இவ்வளவு நாட்கள் கட்டுக்குள் இருந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், தற்போது மீண்டும் ஆரம்பமாகிவிட்டன. முதல் நாளான நேற்று அடிதடி, குடும்ப பிரச்சினை, வாகன விபத்து உள்ளிட்ட பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குடிகாரர்களால் அரங்கேற்றப்பட்டது. இதேபோல் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 143 கடைகளில், கட்டுப்பாடு உள்ள பகுதிகளை தவிர மீதமுள்ள இடங்களில் உள்ள 134 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
குறிப்பாக கடலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் ரயில்வே மேம்பாலத்துக்கு கீழே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்குவதற்காக சுமார் 3 கி.மீ தூரத்திற்கு குடிகாரர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், ஒருவருடன் ஒருவர் முட்டி மோதிக்கொண்டு நின்றிருந்தனர். இந்த தகவல் அறிந்து அங்கு வந்த நகராட்சி ஊழியர்கள், லாரி மூலம் குடிகாரர்கள் மீது கிருமி நாசினியை பீய்ச்சி அடித்தனர்.

தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோல் இரண்டாவது நாளான இன்றும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், குடிகாரர்கள் குடை பிடித்துக்கொண்டு, நீண்ட காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்.
போராட்டம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் வாணமாதேவி கிராமத்தில் சோழத்தரம் காவல் நிலையம் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications