என்ன நடந்தது சிதம்பரத்தில்?.. சிபிஆர் ரிப்பேரா? திணறி திணறி நோயாளி உயிரிழந்த பரிதாபம்.. ஷாக் வீடியோ
கொரோனா நோயாளி மரணம் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது
கடலூர்: சிதம்பரம் பகுதியில் உள்ள ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், பணியாளர்கள் அலட்சியம் காரணமாக கொரோனா நோயாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சிதம்பரத்தை சேர்ந்தவர் கோதண்டராமன்.. இவர் மனைவி பெயர் செந்தாமரை.. இவர்கள் 2 பேருக்குமே கடந்த மாதம் 24ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால், தம்பதி இருவரும் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.. ஆனால், இதில் சிகிச்சை பலனின்றி கடந்த 1-ம் தேதி கோதண்டராமன் உயிரிழந்துவிட்டார்.. அதன்பிறகு செந்தாமரைச்செல்வி மட்டும் தொடர்ந்து அங்கு சிகிச்சையில் இருந்து வந்துள்ளார்.

குற்றச்சாட்டு
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1.45 மணியளவில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பிறகு மூச்சு நின்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.. இந்த திடீர் உயிரிழப்பு அவரது குடும்பத்தினரிடையே கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணியது.. அந்த மருத்துவமனையில் அவருக்கு வைக்கப்பட்டிருந்த சிபிஆர் இயந்திரம் இயங்காததே செந்தாமரையின் மரணத்துக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது..

இயந்திரம்
இதுகுறித்து இந்த தம்பதிகளின் மகன் சீனிவாசன், தானே பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.. அதில், சம்பவ தினத்தன்று, டியூட்டி டாக்டரை அழைத்து வர, சென்றோம்.. ஆனால், டாக்டர் அங்கு இல்லை என்பதால் காலதாமதம் ஆகிவிட்டது.. அதற்குள் சிபிஆர் இயந்திரமும் ரிப்பேர் ஆகிவிட்டது.. அந்த மிஷினை மாற்றுவதற்குகூட டாக்டர்கள் இல்லை..

உரிய சிகிச்சை
உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்கும் டாக்டர்கள் டியூட்டியில் இல்லை.. அதனால்தான் என் அம்மாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, உயிரிழக்க நேரிட்டது" என்று தெரிவித்திருந்தார்.. இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிடவும், பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.

கலெக்டர்
இதுதொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்தபோது, இந்த வீடியோ தொடர்பாகவும், என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தான் உண்மை வெளிவரும், அதன்படி யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனினும், இதுதொடர்பாக புகார் எதுவும் போலீசில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications