ஷாக்.. போலீஸ் நிலையத்திலேயே! தூக்க மாத்திரைகளை தின்று காவல் உதவி பெண் ஆய்வாளர் தற்கொலை முயற்சி
கடலூர்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையில் உதவி பெண் காவல் ஆய்வாளர் அதிகளவில் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர் தற்கொலை முயற்சியின் பின்னணியில் உள்ள திடுக்கிடும் காரணம் வெளியாகி உள்ளது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சுகன்யா. காவல் துறையில் அடிக்கடி அதிகாரிகள், போலீசார் இடமாற்றம் செய்வது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் தான் சுகன்யா பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

நெல்லிக்குப்பம் உதவி காவல் ஆய்வாளராக உள்ள சுகன்யா, விழுப்புரம் காவலர் பயிற்சி பள்ளிக்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து பணி இடமாற்றம் செய்தது பற்றியும், அதற்கான காரணம் குறித்தும் சுகன்யா உயர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், சுகன்யாவின் பணிஇடமாறுதலுக்கான காரணத்தை அவரிடம் கூறவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் சுகன்யா மனம் உடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் வைத்து அவர் திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்கொலை செய்யும் முடிவில் அவர் அதிகளவு தூக்க மாத்திரைகளை தின்றுள்ளார்.

இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புதுச்சேரி தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உதவி காவல் ஆய்வாளர் சுகன்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கடலூர் மாவட்ட போலீஸ் வட்டராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications