ஆங்கில வளர்ச்சியே திமுகவின் நோக்கம்.. தமிழ் வளர்ச்சிக்காக திமுக என்ன செய்தது?.. அண்ணாமலை கேள்வி!
கடலூர்: ஆங்கிலத்தை வளர்ப்பதே திமுகவின் நோக்கம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான, அலுவல் மொழி குழு குடியரசுத் தலைவரிடம் அளித்த பரிந்துரைகள் குறித்த தகவல்கள் வெளியில் கசிந்தது.
அதில் இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ஐஐடி-க்கள் உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் இருப்பதாக தகவல் வெளியாகியது.

பாஜக ஆர்ப்பாட்டம்
இதனை கண்டித்து திமுகவின் இளைஞர் மற்றும் மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் திமுக அரசு தாய்மொழிக்கு முடிவுரை எழுத முயற்சிப்பதாகக் கூறி பாஜக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

பெரியாரை கையில் எடுத்த அண்ணாமலை
கடலூரில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 1965ல் இந்தி எதிர்ப்பு பற்றி பெரியார் பேசிய வார்த்தைகள் எடுத்து அண்ணாமலை பேசினார். அதில், இந்தி எதிர்ப்பு பற்றி பெரியார் பேசியதை திமுகவினர் தெரிந்துகொள்ள வேண்டும். 1967ல் திமுக ஆட்சிக்கு வந்த பின், இந்தி எதிர்ப்பு என்பது இந்தி கூடாது என்பதற்காக அல்ல. ஆங்கிலம் வேண்டும் என்பதற்காக தான் என்று பெரியார் தெரிவித்துள்ளார்.

தெய்வீக மொழி
தமிழ் என்பது தெய்வீக மொழி. நமது மொழியில் மட்டுமே இறையாண்மை, கடவுள், சனாதன தர்மம் ஆகியவை இருக்கிறது. தமிழ் மொழியை ஊக்குவித்தால், இறை நம்பிக்கையை ஊக்குவிக்கிறோம் என்று கருதுகிறார்கள். திமுகவினர் தமிழை இறக்கிபிடித்துவிட்டு ஆங்கிலத்தை ஆதரித்தார்கள்.

திமுக என்ன செய்தது?
1965ல் திமுக இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திய போது, இந்தி எப்போதும் வேண்டாம், ஆங்கிலம் எப்போதும் வேண்டும் என்ற கோஷம் எழுப்பினார்கள். இதுதான் திமுகவின் திட்டம். தாய் மொழியில் 10ம் வகுப்பு மாணவர்கள் 48 ஆயிரம் பேர் தோல்வியடைந்துள்ளனர். இந்தியை யாரும் திணிக்கவில்லை. ஆங்கிலத்தை வளர்ப்பதே திமுகவின் நோக்கம். தமிழ் மொழியின் மேம்பாட்டிற்காக திமுக எதுவும் செய்யவில்லை என்று விமர்சித்தார்.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு!










Click it and Unblock the Notifications