சீட்டு கொடுக்காட்டி அவ்ளோதான்.. கல்லூரி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த விசிக பிரமுகர்!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: அரசு கலைக் கல்லூரி முதல்வரை தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Recommended Video

    கல்லூரி முதல்வருக்கு கொலை மிரட்டல்: ஆடியோ ஆதாரத்தால் சிக்கிய விசிக பிரமுகர்... வழக்குப்பதிவு!

    கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் இயங்கி வரும் அரசு கலைக் கல்லூரி முதல்வர் தென்னரசு. இவர் நேற்று காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் விசிக விவசாய சங்க பிரமுகர் பசுமைவளவன் என்பவர் தொலைபேசியில் தன்னை தொடர்புகொண்டு அவதூறாக பேசினார்.

    மேலும் பணி செய்ய விடாமல் மன உளைச்சலை ஏற்படுத்தி கொலைமிரட்டல் விடுத்ததாக ஆடியோ பதிவுடன் காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணனிடம் புகார் மனு அளித்தார்.

    விசாரணை

    விசாரணை

    அதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் தற்போது மேற்கண்ட கல்லூரியில் 2021-22 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் சிதம்பரம் நாடாளுமன்ற விசிக தொகுதி செயலாளர் வ.க.செல்லப்பன் என்பவர் மாணவர் ஒருவருக்கு சேர்க்கைக்காக சிபாரிசு கடிதம் வழங்கியதாக தெரிகிறது.

    கல்லூரி முதல்வர்

    கல்லூரி முதல்வர்

    கடிதத்தை கல்லூரி முதல்வர் தென்னரசு நிராகரித்துள்ளார். இது தொடர்பாக காட்டுமன்னார்கோவில் விசிக நிர்வாகி பசுமைவளவன் கல்லூரி முதல்வரை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    கல்லூரி முதல்வர்

    கல்லூரி முதல்வர்

    அப்போது பசுமைவளவன் கல்லூரி முதல்வர் தென்னரசை அவதூறாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தது உறுதியானது. சம்பந்தபட்ட ஆடியோ பதிவின் அடிப்படையில் காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் மீனா, உதவி காவல் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 294 பி, 353 மற்றும் 506-I பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    கல்லூரி முதல்வர்

    கல்லூரி முதல்வர்

    கல்லூரி முதல்வரை விசிக பிரமுகர் மிரட்டும் ஆடியோ சமூக வளைதலங்களில் பரவி வருவதால் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கொரோனா முழு ஊரடங்கு நேரத்தில் இரவில் வாகனத்தில் வெளியே வந்ததுடன் முகக் கவசம் அணியாமல் வந்திருந்தார்.

    செல்வாக்கு

    செல்வாக்கு

    இதையடுத்து அவரை அழைத்து எச்சரிக்கை விடுத்த காவல் துறையினரை நான் யார் தெரியுமா, எங்களுக்கு 4 எம்எல்ஏக்கள் உள்ளனர் என கூறி மிரட்டியதாக அவரை போலீஸார் கைது செய்தனர். இது போல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய அரசியல் கட்சி நிர்வாகி ஒருவரை போலீஸார் கைது செய்த போதும் தனது அரசியல் செல்வாக்கை கூறி மிரட்டியது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+