கடவுளிடம் வரம் கேட்டால் நான் என்ன கேட்பேன் தெரியுமா? மக்கள் சந்திப்பு பயணத்தில் ராமதாஸ் உற்சாகம்!
கடலூர்: கடவுள் நேரில் வந்து தன்னிடம் வரம் கேட்கும்படி கூறினால் இரண்டே இரண்டு வரம் மட்டும் கேட்பேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியிருக்கிறார்.
கடலூர் மாவட்டம் பச்சையாங்குப்பத்தில் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்ட அவர் அங்கு மேடையின்றி, ஆடம்பரமின்றி எளியமையாக திண்ணைப் பிரச்சாரம் செய்த போது இதனைக் கூறினார்.

40 ஆண்டுகளுக்கு முன் எப்படி எளிமையாகச் சென்று ராமதாஸ் மக்களை சந்தித்தாரோ, அதே போல் மீண்டும் மக்களைச் சந்திக்க பயணம் புறப்பட்டிருக்கிறார். திண்ணைப் பரப்புரை முறையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்திற்காக ராமதாஸ் விதித்துள்ள முதல் கட்டுப்பாடு, கூட்டம் மிகவும் எளிமையாக நடத்தப்பட வேண்டும் என்பதேயாகும்.
மேலும், கூட்டத்திற்காக மேடை அமைக்கப்படக் கூடாது என்றும் தரையில் ஒரு மேசையும், மூன்று நாற்காலிகளும் மட்டுமே போடப்பட வேண்டும். எனவும் கட்டுப்பாடு விதித்துள்ள ராமதாஸ் நிர்வாகிகளுக்கு செலவை மிச்சப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். அதேபோல் கூட்டத்திற்காக தன்னை வரவேற்று பதாகைகளோ, சுவரொட்டிகளோ ஒட்டக் கூடாது என்பது ராமதாஸ் விதித்துள்ள இன்னொரு கட்டுப்பாடாகும்.
மக்கள் சந்திப்பு பயணத்தின் முதல் நிகழ்வாக கடலூர் மாவட்டம் பச்சையாங்குப்பத்திற்கு சென்ற ராமதாஸ், கடவுள் நேரில் வந்து தன்னிடம் வரம் கேட்கும்படி கூறினால் இரண்டே இரண்டு வரம் மட்டும் கேட்பேன் என்றார். அந்த 2 வரங்கள் என்னவென்றால் தமிழ்நாட்டில் ஒரு சொட்டு மது கூட இருக்கக் கூடாது என்பதும், ஒரு சொட்டு மழைநீர் கூட வீணாக கடலில் கலக்கக் கூடாது என்பதும் தான் என அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மதுவே இருக்கக் கூடாது என்பது தான் கடவுளிடம் தாம் கேட்கும் முதல் வரம் என்றவர் தமிழ்நாட்டில் மதுவை முற்றிலும் ஒழித்து மதுவிலக்கு கொண்டு வர பாமக ஓயாமல் போராடி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். ராமதாஸ் மேற்கொள்ளும் இந்த மக்கள் சந்திப்பு பயணம் பாமகவுக்கும், கட்சியின் நிர்வாகிகளுக்கும் புத்தெழுச்சியை தரும் வகையில் அமைந்துள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications