நான் என்ன அடிமையா? இது ‛கொலைவெறி’ தாக்குதல்.. சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் பற்றி பக்தர் விளக்கம்
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவபக்தரை தாக்கியதாக 2 தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளள்ளது. இந்நிலையில் தான் நான் என்ன அடிமையா? என் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என கோவிலில் நடந்த சம்பவம் குறித்து பக்தர் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்திப்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று சிவபுரி கிராமத்தை சேர்ந்த கார் வண்ணன் என்ற சிவபக்தர் சென்றார். அப்போது சாமி வீதி உலா வந்தது.
#சிவபக்கதர்_தாக்கபட்டார்#சிதம்பரம்_நடராஜர் கோயில் #தீட்சிதர்கள் இருவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு.…#சிவபக்தரை தாக்கிய புகாரின் பெயரில் காவல்துறை நடவடிக்கை.....
— RAMJI (@RAMJIupdates) June 23, 2023
*****
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவ பக்தரான கார்வண்ணன் இவர்… pic.twitter.com/MItRgOy3jE
இதையடுத்து சாமி தரிசனம் செய்ய கார்வண்ணன் முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் சாமி வீதி உலாவுக்கு எதிரே நின்றதாக தெரகிறது. அப்போது கார்வண்ணன் மற்றும் தீட்சிதர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றவே 2 தீட்சிதர்கள் கார்வண்ணனின் கன்னத்தில் தாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில், காயம் அடைந்த கார்வண்ணன் சம்பவம் குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சபாபதி தீட்சிதர் மற்றும் ஸ்ரீ வர்ஷன் தீட்சிதர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தான் கோவிலில் நடந்த சம்பவம் குறித்து சிவபக்தர் கார் வண்ணன் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: என் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. நான் கடந்த 15 நாட்களாக வழக்கமாக தினமும் காலையில் கோவிலுக்கு சென்று வருகிறேன். அதுபோல் தான் கோவிலுக்கு வந்தேன். கோவிலில் ஓரமாக நின்றேன். அப்போது வந்த தீட்சிதர் ‛ஏ இங்கெல்லாம் ஏன் நிற்கிறார்.. போயா அங்கீட்டு' என பேசினார்.
இதையடுத்து நான், ‛‛நான் என்ன உங்கவிட்டு அடிமையா? மாட்டுக்காரனா? பண்ணை அடிமையா?'' என கேள்வி கேட்டேன். ஒருவர் இன்னொருவரிடம் எப்போதும் தன்மையாக பேச வேண்டும். சுயமரியாதை கொடுக்க வேண்டும். என்னால் இடையூறு இல்லாதபோது அநாவசியமாக நடப்பது, எதேச்சதிகாரமாக நடப்பது உள்ளிட்டவை எல்லாம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதுபோல் நடந்து கொள்ளும் தீட்சிதர்கள் 60 சதவீதம் இருக்கிறார்கள். நான் அன்றாடம் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். அன்பாக, பண்பாக, பணிவாக பேசக்கூடிய தீட்சிதர்களும் குறிப்பிட்ட சதவீதம் உள்ளனர். இது சாமி காரியம். இதில் இன்னும் ஆழமாக போக விரும்பவில்லை. என்னை வலுவாக தாக்கினர். இடிபோல் அடி விழுந்தது. மருத்துவமனைக்கு சென்றேன். மருத்துவ சிகிச்சை தொடர்பான ரிசல்ட் திங்கட்கிழமை வரும்'' என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications