கூலி தொழிலாளி கொலை வழக்கு.. தி.மு.க எம்.பி ரமேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி.. நீதிமன்றம் உத்தரவு!
கடலூர்: கூலி தொழிலாளி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கடலூர் தி.மு.க எம்பி ரமேசின் ஜாமீன் மனுவை கடலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி பணிக்கன் குப்பம் பகுதியில் கடலூர் தி.மு.க எம்பி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை உள்ளது.
இங்கு வேலை செய்த கூலி தொழிலாளி கோவிந்தராஜ் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கூலி தொழிலாளி கொலை
முதலில் இந்த வழக்கை தமிழ்நாடு காவல்துறை விசாரித்து பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையில் கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் கடலூர் எம்.பி.ரமேஷ் அவரது உதவியாளர் நடராஜன் மற்றும் கந்தவேல், அல்லாபிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், வினோத் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கடலூர் எம்.பி.ரமேஷை தவிர மற்ற 5 பேரையும் முதலில் கைது செய்தனர்.

கடலூர் எம்.பி ரமேஷ்
கடந்த 11-ம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் கடலூர் எம்.பி ரமேஷ் சரணடைந்தார். இதனை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 13-ம் தேதி கடலூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அன்றைய தினமே சி.பி.சி.ஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நட்த்தினார்கள். அவர் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கடலூர் எம்.பி ரமேஷை 27-ம் தேதி வரை 15 நாட்கள் காவலில் வைக்க கடலூர் முதன்மை குற்றவியல் நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார்.

ஜாமீன் கேட்டு மனு
கடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கடலூர் எம்.பி ரமேஷ் ஜாமீன் கேட்டு நேற்று முன்தினம் கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை, டலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோவிந்தராஜ் தரப்பில் இருந்து, தடை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

தள்ளுபடி செய்யப்பட்டது
அந்த மனுவை முழுமையாக படிக்க கால அவகாசம் வேண்டும் என தி.மு.க ரமேஷின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை இன்று ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றதில் ரமேஷ் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது விசாரணை முடிவில் நீதிபதி ஜவகர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உத்தரவிட்டார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications