டெல்லி போராட்ட சம்பவம்... இதுவரை 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!
டெல்லி: டெல்லி வன்முறை தொடர்பாக இதுவரை 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண டெல்லி போலீசார் அனைத்து மொபைல் மற்றும் வீடியோ காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களை வேறு வழியில் செல்ல தூண்டிய விவசாயிகள் சங்க தலைவர்களும் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

வன்முறையாக மாறிய பேரணி
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நேற்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையாக மாறியது. சில விவசாயிகள் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். ஆனாலும் தடுப்புகளை போலீசார் மீது எறிந்த விவசாயிகள் முன்னோக்கி சென்றதால் கண்ணீர்ப் புகை குண்டு வீசப்பட்டது.

144 தடை உத்தரவு
போலீசார் தடியடி நடத்தினார்கள். டெல்லி முழுவதும் வன்முறைக்களமாக ஆனது. டெல்லியில் உள்ள அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. ஆனாலும் விவசாயிகள் தடையை மீறி சென்றதால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவியது. தற்போது டெல்லியில் 144 தடை உத்தரவு உள்ளது. அங்கு நிலைமை ஓரளவு சீராக உள்ளது. இந்த நிலையில் இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வீடியோ காட்சிகள் ஆய்வு
டெல்லி வன்முறை தொடர்பாக இதுவரை 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண டெல்லி போலீசார் அனைத்து மொபைல் மற்றும் வீடியோ காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். லல்கிலா, மத்திய டெல்லி, முகர்பா மற்றும் நாங்லோய் ஆகிய இடங்களில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கேமராக்களின் காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

விவசாய சங்க தலைவர்கள்
போலீசாரை தாக்கி, செங்கோட்டையின் கோபுரங்களின் மீது ஏறி, அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களின் மொபைல் வீடியோ காட்சிகள் மற்றும் சி.சி.டி.வி காட்சிகள் போலீசாரால் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆர்ப்பாட்டக்காரர்களை வேறு வழியில் செல்ல தூண்டிய விவசாயிகள் சங்க தலைவர்களும் அடையாளம் காணப்படுகிறார்கள்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications