சாலையில் தாறுமாறாக ஓடிய லாரியால் விபத்து.. தடுப்புச் சுவர், ஆட்டோ மீது மோதியது.. இருவர் பலி
டெல்லி: சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி, அங்கு நின்றிருந்து ஆட்டோக்கள் மற்றும் நடந்து செல்பவர்களின் மீது மோதியதில் இருவர் பலியாகிவிட்டனர்.
டெல்லியின் இந்தியா கேட் அருகே உள்ள மான் சிங் சாலையில் வேகமாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரி அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவரில் மோதியது.
அங்கு ஓரமாக நின்றிருந்த ஆட்டோக்கள் மீது மோதியது. பின்னர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் இருவர் பலியாகிவிட்டனர். இறந்தவர்களில் ஒருவர் 42 வயது மதிக்கத்தக்கவர் என்றும் குழந்தை என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த லாரியின் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மாட்டுக் கறி சாப்பிடாதே.. கொந்தளித்த வட இந்தியர்கள்.. போராட்டத்தில் குதித்த மலையாளிகள்
Comments
English summary
Two people were killed while two others were injured after the driver of a truck lost control.
Story first published: Tuesday, September 3, 2019, 10:33 [IST]