அதிகரித்து வரும் கொரோனா...மாநிலங்களிடம் மோடி அறிவுறுத்திய 5 விஷயங்கள் இது தான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி : இந்தியாவின் தினசரி கொரோனா அதிகரிப்பு சராசரியாக ஒரு லட்சத்தை கடந்து வருகிறது. மிக அதிகபட்சமாக இன்றே ஒரே நாளில் 1.27 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் செப்டம்பர் மாத மத்தியில் ஒரே நாளில் 98,000 பேருக்கு கொரோனா தொற்ற ஏற்பட்டதே உச்சபட்சமாக கருதப்பட்டது.

அதிகரித்து வரும் கொரோனா காரணமாக மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். போர் கால அடிப்படையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். இது தவிர முக்கியமான 5 விஷயங்களை மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். அதன் விபரம் :

இரவு நேர ஊரடங்கு ஏன்

இரவு நேர ஊரடங்கு ஏன்

கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருவதால் மக்களிடம் எச்சரிக்கை விடுக்கவே சில பகுதிகள் மூடப்பட்டும் இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டும் உள்ளது. மக்கள் நடமாட்டத்தை குறைக்கவே இரவு நேர ஊரடங்கு.

குடும்பம் முழுவதிற்கு சோதனை

குடும்பம் முழுவதிற்கு சோதனை

அறிகுறி இல்லாத நோயாளிகளை கண்டறிவது அவசியம். அதனால் பரசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். பலர் அறிகுறி இல்லாமல் இருப்பதால் அவர்களின் ஒட்டுமொத்த கடும்பமும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறது. ஒருவருக்கு தொற்று ஏற்பட்டாலும் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஆர்டி - பிசிஆர் சோதனைகள் எடுக்கப்பட வேண்டும்.

இறப்பு விகித கண்காணிப்பு அவசியம்

இறப்பு விகித கண்காணிப்பு அவசியம்

பாசிடிவ் விகிதத்தை 5 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர வேண்டும். இறப்பு விகித புள்ளி விபரங்களும் முழுமையாக ஆராயப்பட வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் இவை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மருந்துகளை வீணடிக்க கூடாது

மருந்துகளை வீணடிக்க கூடாது

தடுப்பு மருந்துகள் வீணாக்கப்படுவதை தடுக்க வேண்டும். தடுப்பு மருந்து திருவிழாவை ஏப்ரல் 11 ல் துவங்கி 14 வரை மேற்கொள்ள உள்ளோம். தடுப்பு மருந்துகள் வீணாக்கப்படும் அளவை பூஜ்ஜியம் என்ற அளவில் கொண்டு வந்து, தகுதியான அதிக மக்களுக்கு மருந்துகளை செலுத்த வேண்டும்.

அலட்சிய நபர்கள் மீது நடவடிக்கை

அலட்சிய நபர்கள் மீது நடவடிக்கை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கவர்னர் அடங்கிய அனைத்துக் கட்சி கூட்டத்தை மாநிலங்கள் நடத்த வேண்டும். பெரிய அளவில் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+