ஏமாந்த மத்திய அரசு ஊழியர்கள்.. பட்ஜெட்டில் 8வது ஊதிய குழு அறிவிப்பு வராததால் கடும் கோபம் - வார்னிங்
டெல்லி: 2026-27 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நேற்று முன்தினம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் 8 வது ஊதிய குழு அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கான ஊதியம் குறித்த எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், பிற அலோவன்ஸ் மற்றும் ஓய்வூதியங்களை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 8-வது ஊதிய குழுவை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது.

இந்த ஊதிய குழுவை அமைக்க மத்திய அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒப்புதல் வழங்கியது. அதன்பிறகு 8 வது ஊதியக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் நியமிக்கப்பட்டார்.
8வது சம்பள கமிஷன் நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். அவர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்டவை கிடுகிடுவென அதிகரிக்கும். ஆனால் தற்போது வரை 8 வது ஊதியக்குழு தொடர்பான மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முன்தினம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் 8 வது ஊதியக்குழு குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அதுபற்றி எதுவுமே தெரிவிக்கப்படவில்லை. இதனால் 2026ம் ஆண்டில் 8 வது ஊதியக்குழு பரிந்துரையில் சம்பளம், ஓய்வூதியம், பிற அலோவன்ஸ் உள்ளிட்டவை உயர்த்தப்பட்டு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி 8 வது சம்பள கமிஷன் மற்றும் பணியாளர் நலன் சார்ந்த பிரச்சனைகள் பற்றி பிரமதர் மோடி தலைமையில் அர்த்தமுள்ள வகையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதனை உடனடியாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பிப்ரவரி 12ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.
இதனை சிசிஜிஇடபிள்யூ (CCGEW) எனும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த கூட்டமைப்பு சார்பில் அமைச்சரவை செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் 8வது ஊதியக் குழு விவகாரத்தில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தால், பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடும் என்று எச்சரித்துள்ளது.
-
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..இனி முழு ஊதியத்துடன் 12 வாரம் விடுப்பு! வெளியான முக்கிய அறிவிப்பு! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications