அதிக வெளிச்சம்.. அதிக சப்தம் உண்டாக்கும் அறையில் அபிநந்தன்.. 40 மணி நேர சித்திரவதை அனுபவிப்பு
டெல்லி: அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் 40 மணி நேரம் சித்திரவதை செய்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎஃப் படை வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இதையடுத்து இந்திய விமான படையினர் பாகிஸ்தானில் வான் வழி தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தன. இந்த தாக்குதலை அடுத்த பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தன.

அபிநந்தன்
அப்போது மிக் ரக விமானங்கள் பாகிஸ்தான் விமானங்களை புறமுதுகிட்டு ஓடச் செய்தன. அப்போது விங் கமாண்டர் அபிநந்தனின் விமானத்தை பாகிஸ்தான் விமான படையினர் சுட்டனர். இதையடுத்து பாராசூட் மூலம் அபிநந்தன் கீழே குதித்தார்.

தகவல்கள்
இதில் துரதிருஷ்டவசமாக பாகிஸ்தான் எல்லையில் விழுந்த அபிநந்தனை அந்நாட்டு ராணுவத்தினர் சிறை பிடித்தனர். அவர் பாகிஸ்தான் பிடியில் இருந்த போது சித்திரவதையை அனுபவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

5 மணி நேரம்
அபிநந்தன் இஸ்லாமாபாத்தில் ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த போது எந்த சித்திரவதையையும் அனுபவிக்கவில்லை. ஆனால் இஸ்லாமாபாத்திலிருந்து 5 மணி நேரம் பயணம் தூர கொண்ட ராவல்பிண்டிக்கு அழைத்து சென்ற போது அங்கு பாகிஸ்தான் புலனாய்வு பிரிவினரால் சித்திரவதை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சப்தம்
அவரை வெளிச்சம் அதிகமாக உள்ள அறையில் அடைத்து வைத்திருந்தனர். அத்துடன் காதுகளை பாதிக்கும் அளவுக்கும் தலைவலியை ஏற்படுத்தும் அளவுக்கு சப்தத்தையும் அங்கு உண்டாக்கியுள்ளனர். அத்துடன் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை அபிநந்தனை அதிகாரிகள் துன்புறுத்தியுள்ளனர். மொத்தம் 58 மணி நேரம் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த அபிநந்தனை 40 மணி நேரம் அதிகாரிகள் தொடர்ந்து துன்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ராணுவம்
அபிநந்தன் டீ குடிப்பது போன்று வெளியான புகைப்படம் அந்நாட்டு ராணுவத்தினரின் மெஸ்ஸில் எடுக்கப்பட்டது. அங்கிருந்த வரை அபிநந்தனுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications