புகையிலை பழக்கத்தால் ஆண்டுக்கு இத்தனை லட்சம் பேர் மரணமா?... அதிர்ச்சி தகவல்
டெல்லி: புகையிலை பழக்கத்தால் ஆண்டுக்கு 80 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
புகை பிடிக்கும் பழக்கம் என்பது, இளைஞர்கள் மத்தியில் ஒருவித தொற்று நோய் போலவே பரவி வருகிறது. பள்ளிப்பருவத்திலேயே பலர் சிகரெட் பிடிக்க தொடங்கி விடுகிறார்கள். இப்படி மாணவ பருவத்திலேயே புகை பழக்கத்துக்கு அடிமையாகும் மாணவர்கள் அதில் இருந்து மீள முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
குட்கா, பான் மசாலா போன்ற பொருட்களுக்கான தடைச்சட்டம் போடப்பட்டிருக்கிறது. இருந்தும் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதால், முழுமையான தீர்வு ஏற்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

80 லட்சம் பேர் மரணம்
புகையிலை பழக்கம் கொண்டவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய், காசநோய், ஆஸ்துமா ஆகிய நோய்கள் உருவாவதாகவும், புகையிலை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர், நுரையீரல் நோயால் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிலை பழக்கத்தால் ஆண்டுக்கு 80 லட்சம் பேர் மரணம் அடைவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆய்வுகள் நிரூபிக்கவில்லை
புகைப்பிடிக்கும் நபர்களுக்கு அருகே நிற்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ள உலக சுகாதார நிறுவனம், இதுபோன்றவர்களால் ஆண்டுக்கு 60 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமானோர் புகையிலை பழக்கம் கொண்டுள்ளனர் என்றும், இ-சிகரெட் பாதுகாப்பானது என இதுவரை ஆய்வுகள் நிரூபிக்கவில்லை எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மரணம் அதிகம்
புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் உயிரிழப்பு, மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் வேகமாக உயருகின்றது. இந்தியாவில் 56.4 சதவிகித ஆண்களுக்கும், 44.9 சதவிகித பெண்களுக்கும் புகையிலை பழக்கத்தால் புற்று நோய் ஏற்பட்டிருக்கிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிகோடின் மாத்திரை
அதே நேரம், புகைப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாதவர்களுக்காக, தேவையான நிகோடினை மட்டும் பெற்றுக்கொள்ள நிகோடின் மாத்திரைகளும் சூயிங்கங்களும் விற்கப்பட்டு வருகின்றன. அவர்கள் இதனை மாற்றாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.

விழிப்புணர்வு வாசகங்கள்
புகையிலை பழக்கத்துக்கு எதிராகவும், மத்திய அரசு விழிப்புணர்வு பிரசாரங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. புகையிலை எதிர்ப்பு தினமும் ஆண்டு தோறும் கடை பிடிக்கப்படுகிறது. புகை பிடிப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான புகைப்படங்களுடன் கூடிய விழிப்புணர்வு வாசகங்கள் சிகரெட் அட்டைப் பெட்டிகளில் இடம் பெற்று வருகிறது. 20 சதவிதம் அளவுக்கே இடம் பெற்று இருந்த, எச்சரிக்கை படங்களை 80 சதவீதம் அளவுக்கு மத்திய சுகாதார துறை அமைச்சகம் உயர்த்தியது. இருப்பினும், சொல்லும் படியான முன்னேற்றம் இல்லை மாறாக உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications