நீங்க சொல்வது தப்பு.. பிரசாந்த் பூஷன் ட்வீட்டுக்கு ஆட்சேபம் சொன்ன ட்விட்டர்.. என்ன நடந்தது?
டெல்லி:மூத்த வழக்கறிஞரும், சமூக போராளியுமான பிரசாந்த் பூஷன் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவு தவறானது என்று டுவிட்டர், மார்க் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டர் நிர்வாகத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஏற்கனவே பூசல் இருந்து வருகிறது. சமீபத்தில், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டுவிட்டர் கணக்கை சில நிமிடங்கள் முடக்கிவைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது டுவிட்டர் நிர்வாகம்.

இந்தநிலையில் பிரசாந்த் பூஷன் வெளியிட்ட ஒரு தகவலை தவறான தகவல் என்று குறிப்பிட்டுள்ளது ட்விட்டர்.
அவர் தனது ட்விட்டர் பதிவில் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட 45 வயது பெண் 10 நாட்கள் கழித்து இறந்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார். இதை ட்விட்டர் தவறான தகவல் என்று குறிப்பிட்டதோடு பெரும்பாலான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி நன்மை பயக்கும் என்று சுகாதார அதிகாரிகள் கூறியதை கவனிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

பாஜக மூத்த தலைவர் சம்பித் பத்ரா, சமீபத்தில், கொரோனா விஷயத்தில் மத்திய அரசை நெருக்கடிக்கு உள்ளாக்க காங்கிரஸ் டூல்கிட் வெளியிட்டதாக தெரிவித்திருந்தது. இந்த டுவிட்டர் பதிவுக்கு இதே தவறான தகவல் என்று ட்விட்டர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications