Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்னிபாத் போராட்டம்.. இன்று பிரதமர் மோடியை சந்திக்கும் முப்படை தளபதிகள்.. முக்கிய ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அக்னிபாத் போராட்டத்திற்கு இடையில் முப்படை தளபதிகள் இன்று பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

நாடு முழுக்க பல்வேறு இடங்களில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று பாரத் பந்த் நாடு முழுக்க கடைபிடிக்கப்பட்டது. பந்திற்கு இடையில் பல்வேறு இடங்களில் மோதல்கள், போராட்டங்கள் நடைபெற்றன.

தமிழ்நாட்டில் இந்த பந்த் பெரிய அளவில் கடைபிடிக்கப்படவில்லை என்றாலும் வடமாநிலங்களில் தீவிரமாக பந்த் பின்பற்றப்பட்டது.

போராட்டம் கைது

போராட்டம் கைது

நேற்று பந்திற்கு இடையில் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட மக்கள் கைது செய்யப்பட்டனர். பீகாரில் பல்வேறு இடங்களில் போராட்டம் செய்த 40 பேர் வரை கைது செய்யப்பட்டனர். மத்திய பிரதேசத்தில் வாட்ஸ் ஆப் குரூப் மூலம் போராட்டத்திற்கு திட்டங்களை மேற்கொண்ட 4 பேர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். நொய்டாவில் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

முப்படை தளபதிகள்

முப்படை தளபதிகள்

அக்னிபாத் போராட்டத்திற்கு இடையில் முப்படை தளபதிகள் இன்று பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு எதிராக முப்படை தளபதிகள் தனி தனியாக சமீபத்தில் கருத்து தெரிவித்தனர். இந்த போராட்டம் தவறான நோக்கத்தோடு நடத்தப்படுகிறது. இந்த போராட்டங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ராணுவத்தில் வாய்ப்பு அளிக்கப்படாது. ராணுவத்திற்கு ஒழுக்கம் முக்கியம். போராட்டம் செய்யும் நபர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை என்று முப்படை தளபதிகள் குறிப்பிட்டனர்.

இன்று சந்திப்பு

இன்று சந்திப்பு

போராட்டம் நாடு முழுக்க வலுத்து வரும் நிலையில் பிரதமர் மோடியை முப்படை தளபதிகள் சந்திக்கிறார்கள். அக்னி பாத் என்ற இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் "அக்னிவீர் " எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர். இவர்கள் 4 வருடம் மட்டுமே பணியில் இருப்பார்கள். இவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Recommended Video

    Agnipath வீரர்களுக்கு செக்யூரிட்டி பணி தருவோம்.. BJP நிர்வாகி சர்ச்சை பேச்சு! *India
    போராட்டம்

    போராட்டம்

    அதே சமயம் இவர்களுக்கு பென்ஷன் இல்லை. அதேபோல் 25 சதவிகிதம் பேர் மட்டுமே இதில் நிரந்தர பணியாளர்களாக தேர்வாவார்கள். அதனால் 4 வருடம் வேலை பார்த்தும் புண்ணியம் இல்லை. எனவே இந்த திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் அதிக அளவில் போராடி வருகிறார்கள். இதில் வருமானம் குறைவாக இருப்பதும் ஒரு காரணம். 4 வருடத்திற்கு பின் என்ன வேலை கிடைக்கும் என்று கேள்வியை தொடர்ந்து இளைஞர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+