அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இன்று பந்த்! நாடு முழுக்க பாதுகாப்பு அதிகரிப்பு! குவிக்கப்பட்ட போலீஸ்
டெல்லி: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பந்த் நடக்க உள்ள நிலையில் நாடு முழுக்க பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
அக்னிபாத் என்ற இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் "அக்னி வீர் " எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர். இதற்கான திட்டத்தை மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்திய ராணுவத்தில் இளமையான வீரர்கள் இருக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவர்கள் 4 வருடம் மட்டுமே பணியில் இருப்பார்கள். இவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.

போராட்டம்
இந்த நிலையில்தான் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மிக தீவிரமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்தில் 4 வருடம் பணியாற்றிய பின் 11.7 லட்சம் ரூபாய் பணம் வழங்கப்படும். ஆனால் இதில் பென்சன் கிடையாது. அதேபோல் 25 சதவிகிதம் பேர் தான் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் இளைஞர்கள் இந்த திட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்து வருகிறார்கள்.

பந்த்
இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுக்க இன்று பந்த் நடத்த போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். பந்த காரணமாக கேரளாவில் மொத்த போலீஸ் படையும் சாலைகளில் குவிக்கப்பட்டு ரோந்து மேற்கொள்கிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், சாலையில் இறங்கி போராட்டம் செய்யும் நபர்கள் உடனுக்குடன் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு
அதேபோல் உத்தர பிரதேசங்களில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள் முன் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்கள் இன்று கூட்டமாக வரும் இளைஞர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. அங்கு அரசு அலுவலகங்கள் முன் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பீகாரில் அக்னிபாத் போராட்டம் காரணமாக ரயில் நிலையங்கள் கடுமையாக சேதம் அடைந்தன.

பீகார்
இதையடுத்து பீகாரில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளனர். இந்த போராட்டத்திற்கு எதிராக பீகாரில் மட்டும் 60 ரயில்கள் பெட்டிகளில் தீ வைக்கப்பட்டு உள்ளன. 10 ரயில் என்ஜின்கள் மொத்தமாக தீக்கிரையாகி உள்ளன. அதேபோல் 10 ரயில் நிலையங்கள் பீகாரில் மட்டும் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகி உள்ளன. இந்த போராட்டத்திற்கு இடையில் பீகாரில் பாஜக அலுவலகம் தாக்கப்பட்டது.

வடஇந்தியா
இதனால் பீகாரில் துணை முதல்வர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் என பா.ஜ.க. தலைவர்கள் 10 பேருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது போக ஜார்கண்ட் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பந்த் காரணமாக விடுமுறை விடப்பட்டு உள்ளது.
பீகாரில் 20 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் செய்யப்பட்டு உள்ளது.டெல்லி, ஹரியானாவில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வடமாநிலங்களில் கடைகள் திறக்கப்படாத நிலையில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications