5 நிமிஷம் ஆக்சிஜன் கட்.. திணறியே உயிரிழந்த 22 பேர்.. ஆஸ்பத்திரிக்கு சீல்.. ஓனரை தட்டி தூக்கிய போலீஸ்
ஆக்ரா மருத்துவமனை ஓனர் கைதாகி உள்ளார்
டெல்லி: நோயாளிகளுக்கான ஆக்சிஜனை 5 நிமிடம் நிறுத்தியதில், 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.. இதனையடுத்து அந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஆக்ராவில் பராஸ் என்ற ஆஸ்பத்திரியின் ஓனர் ஜெயின் பேசும் ஒரு ஆடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது...
"சொல்ல முடியாத அளவுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது... நோயாளிகளை கூட்டிட்டு போய்டுங்க என்று மக்களை கேட்டுக்கொண்டோம்.. ஆனால், யாருமே வந்து கூட்டிட்டு போகல. அதனால், நானே ஒரு ஐடியா செய்தேன்..

ஆடியோ
ஆக்சிஜன் இல்லாவிட்டால் யாரெல்லாம் இறந்துவிடுவார்கள்.. யாரெல்லாம் பிழைப்பார்கள் என்று டெஸ்ட் செய்ய முடிவெடுததேன்.. அதனால், ஏப்ரல் 26-ம்தேதி காலை 7 மணிக்கு 5 நிமிஷம் ஆக்சிஜன் சப்ளையை கட் பண்ணினோம்... இதை பற்றி யாருக்குமே வெளியில் தெரியாது.. உடனே 22 நோயாளிகளுக்கு மூச்சு திணற தொடங்கியது.. அவங்க உடம்பெல்லாம் நீல நிறமாக மாற ஆரம்பித்தது..

அதிர்ச்சி
இதை பார்த்ததும், எப்படியோ பிழைக்க மாட்டாங்கன்னு முடிவு செய்தோம்.. அதனால் மற்றவர்களை சொந்தமாகவே ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்து வருமாறு சொன்னோம்" என்று அந்த ஆடியோவில் உள்ளது. இந்த ஆடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி, பொதுமக்களுக்கு தூக்கி வாரிப்போட்டது..

ஆடியோ
ஆனால், ஜெயின் இதை பற்றி சொல்லும்போது, "அந்த ஆடியோவில் பேசியது நான்தான்.. அதை மறுக்கவில்லை.. ஆனால் நான் பேசியது தப்பாக திரிக்கப்பட்டுள்ளது.. அபாயத்தில் உள்ள நோயாளிகள் யார் என்று கண்டறிந்து அவங்களை பிழைக்க வைக்கவே, நாங்க இப்படி ஒரு செயலை செய்தோம்.. இதுவரை 7 நோயாளிகள் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 22 பேர் உயிரிழக்கவில்லை" என்றார்.

விசாரணை
22 நோயாளிகள் இறந்தார்களா, இல்லையா என்று சரியாக தெரியாது என்று மழுப்பலாக ஜெயின் கூறியிருந்தார்.. ஆனால் உயிருக்கு அபோராடிய 22 நோயாளிகளும் உயிரிழந்ததாகவே கூறப்படுகிறது.. இதையடுத்து அந்த ஆஸ்பத்திரியை சீல் வைத்து மூட அரசு உத்தரவிட்டுள்ளது.. மேலும் அங்கிருந்த நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றவும் உத்தரவிட்டுள்ளது.. ஆனால், நோயாளிகள் யாரும் இந்த பரிசோதனையால் உயிரிழக்கவில்லை என்று மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தி உள்ளது. 22 பேரின் உயிரிழப்புக்கு காரணமான ஆஸ்பத்திரி ஓனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications