Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 நிமிஷம் ஆக்சிஜன் கட்.. திணறியே உயிரிழந்த 22 பேர்.. ஆஸ்பத்திரிக்கு சீல்.. ஓனரை தட்டி தூக்கிய போலீஸ்

ஆக்ரா மருத்துவமனை ஓனர் கைதாகி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நோயாளிகளுக்கான ஆக்சிஜனை 5 நிமிடம் நிறுத்தியதில், 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.. இதனையடுத்து அந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஆக்ராவில் பராஸ் என்ற ஆஸ்பத்திரியின் ஓனர் ஜெயின் பேசும் ஒரு ஆடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது...

"சொல்ல முடியாத அளவுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது... நோயாளிகளை கூட்டிட்டு போய்டுங்க என்று மக்களை கேட்டுக்கொண்டோம்.. ஆனால், யாருமே வந்து கூட்டிட்டு போகல. அதனால், நானே ஒரு ஐடியா செய்தேன்..

ஆடியோ

ஆடியோ

ஆக்சிஜன் இல்லாவிட்டால் யாரெல்லாம் இறந்துவிடுவார்கள்.. யாரெல்லாம் பிழைப்பார்கள் என்று டெஸ்ட் செய்ய முடிவெடுததேன்.. அதனால், ஏப்ரல் 26-ம்தேதி காலை 7 மணிக்கு 5 நிமிஷம் ஆக்சிஜன் சப்ளையை கட் பண்ணினோம்... இதை பற்றி யாருக்குமே வெளியில் தெரியாது.. உடனே 22 நோயாளிகளுக்கு மூச்சு திணற தொடங்கியது.. அவங்க உடம்பெல்லாம் நீல நிறமாக மாற ஆரம்பித்தது..

அதிர்ச்சி

அதிர்ச்சி

இதை பார்த்ததும், எப்படியோ பிழைக்க மாட்டாங்கன்னு முடிவு செய்தோம்.. அதனால் மற்றவர்களை சொந்தமாகவே ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்து வருமாறு சொன்னோம்" என்று அந்த ஆடியோவில் உள்ளது. இந்த ஆடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி, பொதுமக்களுக்கு தூக்கி வாரிப்போட்டது..

ஆடியோ

ஆடியோ

ஆனால், ஜெயின் இதை பற்றி சொல்லும்போது, "அந்த ஆடியோவில் பேசியது நான்தான்.. அதை மறுக்கவில்லை.. ஆனால் நான் பேசியது தப்பாக திரிக்கப்பட்டுள்ளது.. அபாயத்தில் உள்ள நோயாளிகள் யார் என்று கண்டறிந்து அவங்களை பிழைக்க வைக்கவே, நாங்க இப்படி ஒரு செயலை செய்தோம்.. இதுவரை 7 நோயாளிகள் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 22 பேர் உயிரிழக்கவில்லை" என்றார்.

விசாரணை

விசாரணை

22 நோயாளிகள் இறந்தார்களா, இல்லையா என்று சரியாக தெரியாது என்று மழுப்பலாக ஜெயின் கூறியிருந்தார்.. ஆனால் உயிருக்கு அபோராடிய 22 நோயாளிகளும் உயிரிழந்ததாகவே கூறப்படுகிறது.. இதையடுத்து அந்த ஆஸ்பத்திரியை சீல் வைத்து மூட அரசு உத்தரவிட்டுள்ளது.. மேலும் அங்கிருந்த நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றவும் உத்தரவிட்டுள்ளது.. ஆனால், நோயாளிகள் யாரும் இந்த பரிசோதனையால் உயிரிழக்கவில்லை என்று மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தி உள்ளது. 22 பேரின் உயிரிழப்புக்கு காரணமான ஆஸ்பத்திரி ஓனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+