5 நிமிஷம் ஆக்சிஜன் கட்.. திணறியே உயிரிழந்த 22 பேர்.. ஆஸ்பத்திரிக்கு சீல்.. ஓனரை தட்டி தூக்கிய போலீஸ்
ஆக்ரா மருத்துவமனை ஓனர் கைதாகி உள்ளார்
டெல்லி: நோயாளிகளுக்கான ஆக்சிஜனை 5 நிமிடம் நிறுத்தியதில், 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.. இதனையடுத்து அந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஆக்ராவில் பராஸ் என்ற ஆஸ்பத்திரியின் ஓனர் ஜெயின் பேசும் ஒரு ஆடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது...
"சொல்ல முடியாத அளவுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது... நோயாளிகளை கூட்டிட்டு போய்டுங்க என்று மக்களை கேட்டுக்கொண்டோம்.. ஆனால், யாருமே வந்து கூட்டிட்டு போகல. அதனால், நானே ஒரு ஐடியா செய்தேன்..

ஆடியோ
ஆக்சிஜன் இல்லாவிட்டால் யாரெல்லாம் இறந்துவிடுவார்கள்.. யாரெல்லாம் பிழைப்பார்கள் என்று டெஸ்ட் செய்ய முடிவெடுததேன்.. அதனால், ஏப்ரல் 26-ம்தேதி காலை 7 மணிக்கு 5 நிமிஷம் ஆக்சிஜன் சப்ளையை கட் பண்ணினோம்... இதை பற்றி யாருக்குமே வெளியில் தெரியாது.. உடனே 22 நோயாளிகளுக்கு மூச்சு திணற தொடங்கியது.. அவங்க உடம்பெல்லாம் நீல நிறமாக மாற ஆரம்பித்தது..

அதிர்ச்சி
இதை பார்த்ததும், எப்படியோ பிழைக்க மாட்டாங்கன்னு முடிவு செய்தோம்.. அதனால் மற்றவர்களை சொந்தமாகவே ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்து வருமாறு சொன்னோம்" என்று அந்த ஆடியோவில் உள்ளது. இந்த ஆடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி, பொதுமக்களுக்கு தூக்கி வாரிப்போட்டது..

ஆடியோ
ஆனால், ஜெயின் இதை பற்றி சொல்லும்போது, "அந்த ஆடியோவில் பேசியது நான்தான்.. அதை மறுக்கவில்லை.. ஆனால் நான் பேசியது தப்பாக திரிக்கப்பட்டுள்ளது.. அபாயத்தில் உள்ள நோயாளிகள் யார் என்று கண்டறிந்து அவங்களை பிழைக்க வைக்கவே, நாங்க இப்படி ஒரு செயலை செய்தோம்.. இதுவரை 7 நோயாளிகள் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 22 பேர் உயிரிழக்கவில்லை" என்றார்.

விசாரணை
22 நோயாளிகள் இறந்தார்களா, இல்லையா என்று சரியாக தெரியாது என்று மழுப்பலாக ஜெயின் கூறியிருந்தார்.. ஆனால் உயிருக்கு அபோராடிய 22 நோயாளிகளும் உயிரிழந்ததாகவே கூறப்படுகிறது.. இதையடுத்து அந்த ஆஸ்பத்திரியை சீல் வைத்து மூட அரசு உத்தரவிட்டுள்ளது.. மேலும் அங்கிருந்த நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றவும் உத்தரவிட்டுள்ளது.. ஆனால், நோயாளிகள் யாரும் இந்த பரிசோதனையால் உயிரிழக்கவில்லை என்று மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தி உள்ளது. 22 பேரின் உயிரிழப்புக்கு காரணமான ஆஸ்பத்திரி ஓனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications