Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீரென விமானத்தை ரத்து செய்த ஏர் இந்தியா.. தீபாவளிக்கு வர இருந்த பயணிகள் பரிதவிப்பு! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தீபாவளி வரும் 20 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களும் நாடு திரும்பி வருகிறார்கள். அந்த வகையில் இத்தாலியின் மிலன் நகரில் இருந்து டெல்லிக்கு வர ஏர் இந்தியா விமானத்தில் புக் செய்த பயணிகளுக்கு கடைசி நேரத்தில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஏர் இந்தியாவின் அறிவிப்பு அமைந்துள்ளது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்தானதால் பயணிகள் பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தியாவில் மிகக் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வரும் 20 ஆம் தேதி (திங்கள் கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.

air-india-cancels-milan-delhi-flight-days-before-diwali-passengers-stranded-abroad

போக்குவரத்து நெரிசல்

இதனால், கடந்த இரு தினங்களாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று இருக்கிறார்கள். இதனால், கடந்த வியாழக்கிழமை முதலே பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த இரு தினங்களாக சென்னை - திருச்சி சாலையில் சாரை சாரையாக வாகனங்கள் அணி வகுத்து செல்கின்றன.

இதனால் டோல்கேட்களில் போக்குவரத்து நெரிசல் காணப்படும் அளவிற்கு சூழல் உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளிநாடுகளில் கல்வி, வேலை வாய்ப்பு என பல்வேறு காரணங்களுக்காக தங்கியிருக்கும் இந்தியர்களும் நாடு திரும்பி வருவதை பார்க்க முடிகிறது.

ஏர் இந்தியா விமானம் ரத்து

அந்த வகையில், இத்தாலியின் மிலன் நகரில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானத்தில், இந்தியா திரும்ப நூற்றுக்கணக்கான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் காலை வாரியிருக்கிறது ஏர் இந்தியா.

அதாவது, மிலனில் இருந்து டெல்லி செல்லவிருந்த ஏர் இந்தியா AI138 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. "அக்டோபர் 17, 2025 அன்று மிலனில் இருந்து டெல்லிக்குச் செல்லவிருந்த AI138 விமானம், பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பத் தேவை காரணமாக ரத்து செய்யப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிதவித்த பயணிகள்

புக்கிங் செய்த பயணிகள் அனைவருக்கும் ஹோட்டல் தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு விமான நிலையத்திற்கு சற்று வெளியே ஹோட்டல்கள் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்ததாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயணிகளுக்கு அக்டோபர் 20, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு, ஏர் இந்தியா மற்றும் பிற விமான நிறுவனங்களில் இருக்கைகள் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து மாற்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தீபாவளி பண்டிகை 20 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள சூழலில் விமானம் ரத்து செய்யப்பட்டு மாற்று விமானமும் உடனடியாக இல்லாத நிலையால் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

சிரமங்களுக்கு வருந்துகிறோம்

பாதிக்கப்பட்ட அனைத்துப் பயணிகளுக்கும் உணவு உட்பட அனைத்து அத்தியாவசிய சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. "பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு நாங்கள் வருந்துகிறோம், மேலும் எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்" என்று ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+