அல்கொய்தா பயங்கரவாதி வீட்டில் பாதாள அறை.. டன் கணக்கில் வெடி மருந்துகள் பறிமுதல்.. விசாரணையில் பகீர்
டெல்லி: பயங்கர ஆயுதங்களையும் வெடி மருந்து உள்ளிட்ட வெடி பொருள்களை பதுக்கி வைப்பதற்காக அல்கொய்தா பயங்கரவாதி வீட்டில் பாதாள அறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தவும் பல்வேறு நாசவேலைகளை செய்ய சதி திட்டம் தீட்டியிருப்பதாகவும் தேசிய புலனாய்வு அமைப்பிற்கு (என்ஐஏ) தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் கடந்த 18-ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் அதிரடி சோதனைகள் நடத்தினர்.

6 பேர்
இதில் எர்ணாகுளத்தில் 3 பயங்கரவாதிகளும் முர்ஷிதாபாத்தில் 6 பயங்கரவாதிகளும் என 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து ஆயுதங்கள், பணம், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. முர்ஷிதாபாத்தில் கைது செய்யப்பட்ட நஜ்மஸ் சாகிப், அபு சுபியன் முல்லா, மைனுல் மொண்டல், லியு யீன் அகமது, அல் மாமுன் கமால், அதிதுர் ரகுமான் ஆகிய 6 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் கொல்கத்தா வீட்டில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

என்ஐஏ காவல்
அவர்களை வரும் 24-ஆம் தேதி வரை என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மேற்கண்ட 6 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அபு சுபியன் முல்லாவின் முர்ஷிதாபாத் ராணி நகர் வீட்டில் பாதாள அறை ஒன்று புதிதாக கட்டப்பட்டுள்ளது.

தப்பியோட முயற்சி
இதை அதிகாரிகள் கண்டறிந்தனர். அந்த அறையில் பல டன் வெடிப்பொருட்கள், ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் அபி சுபியன், வெள்ளிக்கிழமை இரவு என்ஐஏ அதிகாரிகளின் அதிரடி சோதனையின்போது தப்பியோட முயற்சித்துள்ளார். அப்போது சுவர் ஏறி குதித்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

செல்போன்
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நஜ்மஸ் சாகீப் முர்ஷிதாபாத்தின் டோம்காலை சேர்ந்தவர். இவர் இரண்டாமாண்டு கல்லூரி மாணவர். அவருக்கும் காஷ்மீரில் உள்ள சில இளைஞர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுடன் அவர் செல்போன் மூலம் பேசியதும் தெரியவந்தது.

விசாரணை
இதையடுத்து செல்போனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த நபர் பேசியவர்களை பிடிக்க முயற்சிக்கிறார்கள். மேலும் வேறு எங்காவது யார் மூலமாவது நாச வேலைக்கு சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதானவர்களில் 4 பேரின் வங்கிக் கணக்குகளில் பெரிய மதிப்பிலான பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications