டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடுதழுவிய முழு அடைப்பு போராட்டம்.. கர்நாடக எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்தம்

மத்திய பாஜக அரசை கண்டித்து நடக்கும் நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம் காரணமாக கர்நாடக எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இன்று நாடுதழுவிய முழு அடைப்பு போராட்டம்- வீடியோ

    டெல்லி: மத்திய பாஜக அரசை கண்டித்து நடக்கும் நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம் காரணமாக கர்நாடக எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.

    பாஜக அரசின் கொள்கைகளை எதிர்த்தும், மிக மோசமான திட்டங்களை எதிர்த்தும் இந்த போராட்டம் நடக்கிறது. இன்றும் நாளையும் இந்த போராட்டம் நடக்கிறது.

    All India Bandh: Tamilnadu buses stopped in Karnataka border due to strike

    தொழிலாளர் நல சங்கங்கள் மூலம் போராட்டம் நடக்கிறது. 10க்கும் மேற்பட்ட அமைப்புகள் போரட்டத்தை நடத்துகிறது. 20 கோடி ஊழியர்கள் மத்திய அரசுக்கு எதிராக இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள்.

    ஆனால் போராட்டம் காரணமாக தமிழகத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. தமிழகத்தில் பேருந்துகள், அலுவலகங்கள் எப்போதும் போல இயங்கி வருகிறது. பெரும்பாலான கடைகளும் இயங்கி வருகிறது.

    ஆனால் போராட்டம் காரணமாக கர்நாடக எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள், தொழிலாளர் நல அமைப்புகள் போராட்டத்தை நடத்துகிறது. கர்நாடகாவில் இந்த போராட்டம் பெரிய அளவில் நடக்கிறது.

    கர்நாடகாவில் காலை 8 மணிக்கு பிறகு பேருந்துகள் எதுவும் இயங்கவில்லை. அதேபோல் ஆட்டோக்கள் தொடங்கி மக்கள் போக்குவரத்து வாகனங்கள் எதுவும் இயக்கவில்லை. பெங்களூரை இந்த போராட்டம் முடக்கி உள்ளது.

    இதனால் தற்போது ஓசூர் எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டது. இதனால் அதிகாலை பெங்களூர் நோக்கி சென்ற தமிழர்கள் இன்னலுக்கு உள்ளானார்கள்.

    English summary
    All India Bandh: Tamilnadu buses stopped in Karnataka border due to strike today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X