ஜெயலலிதா மரணத்தில் அப்போலா எதையோ மறைக்க முயற்சி.. உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆணையம் பதில்
டெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்போலோ எதையோ மறைமுக்க முயற்சிப்பதாக உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் தற்போதைய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா தரப்பு மற்றும் ஜெயலலிதா வீட்டில் பணியாற்றிவர்கள், பாதுகாவல்கள் உள்பட பலரிடம் விசாரணை மேற்கொண்டது. இதேபோல் ஜெயலலிதாவுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவர்களிடம் விசாணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையம் மருத்துவர் குழு அமைக்காமல் ஜெயலலிதாவுக்கு அளித்த மருத்துவ சிகிக்சை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் அப்போலா மருத்துவமனை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா மரண விவகாரத்தில் உண்மையை மறைக்க அப்போலோ மருத்துவமனை முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது. அப்போலோ கோரிக்கையில் உள்நோக்கம் இருப்பதாகவும், விசாரணை சரியான பாதையில் சென்றுக் கொண்டிருப்பதாகவும் ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
-
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications