நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்.. மே 4 ஆம் தேதி தேர்வு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
டெல்லி: எம்பிபிஎஸ், மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மே 4 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளது.
எம்பிபிஎஸ்., மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான நீட் எனும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மிகப்பெரிய நுழைவுத் தேர்வாகக் கருதப்படும் நீட் தேர்வை மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இளநிலை நீட் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனர். 2025 ஆம் ஆண்டு இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு துவங்கப்பட்டுள்ளதாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 7 ஆம் தேதி நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. இத்தேர்வுக்கு பதிவு செய்ய மார்ச் 7 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். மார்ச் 7 ஆம் தேதி தேர்வுக் கட்டணம் செலுத்தவதற்கான கடைசி நாளாகும். மே 1 ஆம் தேதி தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்படவுள்ளது.
இளநிலை நீட் தேர்வு மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்வுக்கான முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு 3 மணி நேரம் நடைபெறவுள்ளது. மதியம் 2:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை தேர்வு நடைபெறவுள்ளது.
இத்தேர்வுக்கு பொதுப் பிரிவு மாணவர்கள் ரூ. 1,700, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் ரூ.1,600, எஸ்சி/எஸ்டி/3ம் பாலினத்தவர்கள்: ரூ.1000 மற்றும் வெளிநாட்டினர் ரூ.9,500 தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications