மாணவர்களின் கல்வியாண்டை வீணடிக்கக் கூடாது.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
டெல்லி: மாணவர்களின் கல்வியாண்டை வீணடிக்கக் கூடாது, அதை காக்க வேண்டும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் சமயத்தில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை மத்திய அரசு நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. 7 மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளன.

இந்த நிலையில் இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே கூறுகையில் கொரோனா பீதியால் நீட் தேர்வை ஒத்தி வைக்குமாறு எதிர்க்கட்சிகள் கூறுவதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்வது மிகவும் முக்கியமானது. எனவே தேவையற்ற ஆட்சேபணைகளை தெரிவிக்க வேண்டாம். நீட் தேர்வு குறித்து தேவையற்ற கவலையை உருவாக்கும் எதிர்க்கட்சிகள் சற்று மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்தை நினைத்து பார்க்க வேண்டும்.
மாணவர்களின் நலனுடன் விளையாடி யாரும் பலனடைய முடியாது. எனவே அரசியல் கட்சிகளுக்கு ஒன்றை வலியுறுத்திக் கொள்கிறேன், தேவையில்லாத பிரச்சினைகளை எழுப்பாதீர்கள். நீட் தேர்வில் ஓராண்டு ஒத்தி வைத்துவிட்டால் இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மருத்துவர்களை நம்மால் உருவாக்க முடியாது.
எனவே நாட்டின் நலன் கருதியும் மாணவர்களின் நலனுக்காகவும் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அரசு என்ன முடிவு எடுத்தாலும் அது உங்கள் (மாணவர்கள்) நலனுக்கானது என்பதை புரிந்து கொள்ளுங்கள். தேசிய அளவில் தேசிய தேர்வுகள் முகமை தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறுவோர் வருங்காலத்தில் நல்ல மருத்துவர்களாகவோ என்ஜீனியர்களாகவோ உருவாக வாய்ப்புள்ளது என்றார் சவுபே.
Recommended Video
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications