அயோத்தி.. ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை.. பிரதமர் மோடிக்கு அழைப்பு!
டெல்லி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தி வழக்கு முடிவடைந்து தீர்ப்பு வந்துள்ள நிலையில் இதுவரை நான்கு முறை அங்கு ராமர் கோவில் கட்டுவது தொடர்பான மீட்டிங் நடந்துள்ளது. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பு சார்பாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று மாலையும் இது தொடர்பான மீட்டிங் நடைபெற்றது.

இந்த ஆலோசனையில் அயோத்தியில் கட்ட இருக்கும் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை எப்போது நடத்தப்படலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டது. அதன்படி கோவிலுக்கான பூமி பூஜையை ஆகஸ்ட் 3 அல்லது 5ம் தேதி செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவிற்கு பிரதமர் மோடியை அழைக்க அந்த குழு முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடியின் முடிவை பொறுத்து இரண்டில் ஒருநாள் தேர்வு செய்யப்படும் என்று கூறுகிறார்கள். இதன் மூலம் அயோத்தியில் அந்த குறிப்பிட்ட பகுதிக்கு பிரதமர் மோடி முதல்முறை செல்ல வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
இந்த பூமி பூஜைக்கு பின் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று கூறுகிறார்கள். ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பு கடந்த பிப்ரவரி 5ம் தேதி தொடங்கப்பட்டது. பிரதமர் மோடி இந்த ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பை தொடங்கி வைத்தார்.
ஜாதக முறைப்படி இந்த இரண்டு நாட்களை தேர்வு செய்து இருப்பதாக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது இந்த கோவிலை கட்டுவதற்கான ஆய்வு பணிகள் அங்கு நடந்து வருகிறது. அங்கு மண் ஆய்வு பணிகளை ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பு செய்து வருகிறது. இதற்கான நிதி தற்போது மக்களிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது.
இந்த ராமர் கோவில் கட்டுமானம் 3 -3.5 வருடத்தில் முடியும் என்று கூறுகிறார்கள். இதற்கான விழா பெரிய அளவில் நடக்கும் என்று கூறுகிறார்கள்.
Recommended Video
கடந்த வருடம் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக ஒதுக்க வேண்டும். அயோத்தியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மாற்று இடம் வழங்க வேண்டும், என்று தீர்ப்பு வழங்கியது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications