விற்பனையை அதிகரிக்க வியூகம்.. கார், வீடுகள் விலை குறைகிறது.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு
Recommended Video
டெல்லி: கார் மற்றும் வீடுகளின் விலை குறையப்போகிறது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.
பொருளாதார சரிவு பிரச்சினைக்கு நடுவே, டெல்லியில் இன்று மாலை நிருபர்களை, சந்தித்த நிர்மலா சீதாராமன கூறியதாவது:
தொழில்துறைக்கான மூலதன நிதி திரட்டும் முறைகள் எளிதாக்கப்படும். பொதுத்துறை வங்கிகளின் மூலதன ஊக்கத்திற்காக ரூ.70000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

நேரடி பலன்
ரிசர்வ் வங்கி வட்டிக்குறைப்பு மூலம் மக்கள் உடனடியாக பலன் பெற நடவடிக்கை. அதாவது, ரேபோ விகிதம் குறைக்கப்பட்ட உடன் இஎம்ஐ உடனடியாக குறைக்கப்படும். வீட்டுக்கடன், ஆட்டோமொபைல் கடன் மீதான வட்டி உடனடியாக குறைக்கப்படும். ரிசர்வ் வங்கி வட்டிக்குறைப்பு மூலம் மக்கள் உடனடியாக பலன் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
இனிமேல், வெறும், 30 நாட்களில் சிறு வணிகங்களுக்கு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி பண நிலுவையை திருப்பித் தர உள்ளோம். சிறு, குறு தொழில் தொடங்க எளிதாக கடன் வழங்கப்படும். ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான ஏஞ்சல் வரி திரும்பப் பெறப்பட்டுகிறது. கடன் திரும்ப செலுத்தப்பட்ட 15 நாட்களுக்குள் வாடிக்கையாளர்களின் ஆவணங்கள் திருப்பித் தரப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

வாகன விற்பனை சரிவு
பொருளாதாரச் சரிவு காரணமாக, இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. பயணிகள் வாகனங்கள், அதாவது கார் இருசக்கர வாகனங்கள் போன்றவை தவிர்த்து, சரக்கு வாகனங்கள் வாங்குவதற்கும் வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக மாருதி சுசுகி முதல் அசோக் லேலண்ட் நிறுவனம் வரை பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது. தள்ளுபடி விலையில் வாகனங்களை விற்பனை செய்வதில் அவர்கள் மும்முரமாக உள்ளனர். உற்பத்தி ஸ்தம்பித்து உள்ளதால் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ரியல் எஸ்டேட் கடும் சரிவு
இதே போன்று தான் ரியல் எஸ்டேட் தொழிலிலும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் அதற்கு முந்தைய ஆண்டின் அதே காலகட்டத்தில் ஒப்பிட்டால் 43 சதவீதம் அளவுக்கு வீடுகளின் விற்பனை சரிவடைந்து இருந்தது. இந்த நிலையில்தான் கார் மற்றும் வீட்டு கடன் மீதான வட்டியை வங்கிகள் குறைக்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ளது அந்த துறைகளுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புது ரத்தம்
இந்த அறிவிப்பின் மூலமாக வாகனங்கள் விற்பனை மற்றும் ரியல் எஸ்டேட் வர்த்தகம் அதிகரித்தால் கண்டிப்பாக பொருளாதாரத்திற்கு அது புது ரத்தம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications